Friday, March 31, 2017

•வரலாற்றில் இடம் பிடித்த கேப்பாப்பிலவு மக்களின் போராட்ட வெற்றி சொல்லும் சேதி என்ன?

•வரலாற்றில் இடம் பிடித்த கேப்பாப்பிலவு மக்களின்
போராட்ட வெற்றி சொல்லும் சேதி என்ன?
தமது நிலத்தை திருப்பி ஒப்படைக்குமாறு கோரி கடந்த 29 நாளாக போராடிய கேப்பாப்பிலவு மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கேப்பாப்பிலவு மக்களின் இந்த போராட்ம் தமிழ் மக்களின் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்துள்ளது.
யுத்தம் முடிந்து 7 வருடமாகியும் அந்த மக்களது நிலத்தை ராணுவம் ஒப்படைக்கவில்லை. தமிழ் தலைவர்களும் இது குறித்து அக்கறை எடுக்கவில்லை.
எனவே வேறு வழியின்றி அந்த மக்கள் தமது நிலத்திற்காக தாமே போராட்டத்தை ஆரம்பித்தனர்.
7 வருடமாக கிடைக்காத நிலத்தை 29 நாள் போராட்டத்தின் மூலம் பெற்றுள்ளனர். இந்த மக்களின் வெற்றி சொல்லும் சேதி,
(1) போராட்டம் தோல்வியை தருவதில்லை. அது எப்போதும் வெற்றியை தருகிறது.
(2) நிலம் கிடைக்கும் வரை போராடுவது என்பதில் உறுதியாக இருந்தனர். அந்த உறுதி வெற்றியைக் கொடுத்துள்ளது.
(3) இலங்கை வரலாற்றில் 29 நாட்கள் குழந்தைகள் தமது நிலத்திற்காக போராடியது இந்த போராட்டம் மட்டுமே..
(4) போராட்டம் இன்பகரமானது என்பதை அந்த குழந்தைகள் நிரூபித்து காட்டினார்கள்
.
(5) போராட்டம் குழந்தைகளுக்கு இலக்கியத்தை மட்டுமல்ல கல்வியையும் களத்தில் கொடுத்தது.
(6) குழந்தைகளின் போராட்டம் தமிழ் மக்களின் ஆதரவை மட்டுமன்றி சிங்கள முஸ்லிம் இன மக்களது ஆதரவினையும் பெற்றுக் கொடுத்தது.
(7) சம்பூரை அடுத்து கேப்பாப்பிலவு மக்கள் சாதித்து காட்டியுள்ளனர். இது மற்ற போராட்டங்களுக்கு உற்சாகத்தையும் உறுதியையும் கொடுத்துள்ளது
.
(8) எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் சக்தி மகத்தான சக்தி என்பதை கேப்பாப்பிலவு மக்கள் நிரூபித்து காட்டியுள்ளனர்.
மாபெரும் வெற்றியை பெற்றுள்ள அந்த குழந்தைப் போராளிகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

No comments:

Post a Comment