Friday, March 31, 2017

•இதுதான் இந்திய அரசு!

•இதுதான் இந்திய அரசு!
ஏ.கே47 துப்பாக்கிகளுக்கு இணையான அசால்ட் ரைபிள் துப்பாக்கிகளை இந்திய அரசு தயாரித்துள்ளது.
திருச்சியில் உள்ள இந்திய அரசு துப்பாக்கி தொழிற்சாலையிலேயே இந்த துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
பல கோடி ரூபா மக்கள் பணத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக திட்டமிட்டு இந்த நவீன துப்பாக்கிகள் இந்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த அசால்ட்ரைபிள் துப்பாக்கிகள் எல்லையில் இருக்கும் ராணுவத்திற்கு வழங்கப்படவில்லை. மாறாக சதீஸ்கர் மாநில பொலிசாருக்கே வழங்கப்பட்டுள்ளன.
சதீஸ்கர் மாநில பொலிசார் ஆதிவாசி பழங்குடி மக்களை நக்சலைட்டு என்று முத்திரை குத்தி கொன்று வருகின்றனர். ஆதிவாசி பழங்குடி பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்கின்றனர்.
சதீஸ்கர் மாநில பொலிஸ் மேலும் மேலும் அப்பாவி மக்களை கொல்வதை ஊக்கப்படுத்துவதற்காக மக்களின் வரிப் பணத்தில் நவீன துப்பாக்கி தயாரித்து வழங்கப்படுகிறது.
அதேவேளை இதே இந்தியாவில் மனிதனின் மலத்தை இன்னொரு மனிதன் கையால் அள்ளும் அவல நிலை தொடர்கிறது.
ஒரேநேரத்தில் பல ராக்கட்டுகளை விண்ணுக்கு எவி சாதனை புரிந்துள்ள இந்திய அரசு விரும்பினால் ஒரோ நாளில் கையால் மனித மலத்தை அள்ளும் அவலத்தை நீக்க முடியும்.
மதுரையில் மனித மலத்தை கையால் அள்ளிய தொழிலாளர் மரணமடைந்ததை முன்னிட்டு Divya Bharathi என்பவர் அந்த அவலத்திற்கு எதிராக கக்கூஸ் என்ற ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார்.
இந்திய அரசு உடனே நடவடிக்கை எடுத்தது. ஆம். மனித மலத்தை கையால் அள்ளும் அவலத்தை நிறுத்தவில்லை. மாறாக அந்த அவலத்தை சொன்ன கக்கூஸ் ஆவண படத்தை தடை செய்துள்ளது.
மக்களை சுடுவதற்கு மக்கள் பணத்தில் நவீன துப்பாக்கிகளை தயாரிக்கும் இந்திய அரசு அநாகரீகமான , அபத்து நிறைந்த மனித மலத்தை கையால் அள்ளும் தொழிலை நிறுத்த முன்வரவில்லை.
நிறுத்த முன்வராதது மட்டுமன்றி அதுபற்றி வழிப்புணர்வு ஊட்டும் படங்களையும் , செயற்பாடுகளையும்கூட இந்திய அரசு தடை செய்து வருகிறது.
இதுதான் இந்திய வல்லரசு?

No comments:

Post a Comment