Friday, March 31, 2017

•வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றிகள்!

•வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றிகள்!
எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறுவயதில் அர்ச்சனை செய்து விபூதியை தாயார் என் நெற்றியில் பூசும்போது அன்று என் பிறந்தநாள் என்பதை தெரிந்து கொள்வேன்.
அதன்பின்னர் பெரியவனான பின்பு பிறந்த நாள் பற்றி அக்கறை கொள்வதில்லை.
ஒருமுறை நான் வேலுர் கோட்டையில் சிறப்புமகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது (1992ம் ஆண்டு) அங்கு இருந்த காயம்பட்ட புலிப் போராளிகளால் எனது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
அன்று, இரண்டு கண்ணும் இரண்டு கையும் அற்ற ஒரு போராளி சிறுவன் எனக்கு தன் கையால் புட்டும் பலாப்பழமும் பிறந்தநாள் பரிசாக தந்தது இன்றும் என் நினைவில் உள்ளது.
அதன்பின்னர் இம்முறை ஆயிரக் கணக்கனாவர்கள் என்னை வாழ்த்தியுள்ளார்கள்.
இந்த வாழ்த்துக்கள் எனக்கு மகிழ்சியை கொடுத்தாலும் இன்னொரு புறத்தில் எனக்கு இருக்கும் பொறுப்புகளை நினைவூட்டுகின்றன.
எனது புரட்சிகர கடமைகளை தொடர்ந்து மேற்கொள்வேன் என உறுதியளிக்கிறேன்.
நான் ஒருபோதும் தோற்றுப்போக மாட்டேன் !

No comments:

Post a Comment