Tuesday, September 12, 2017

•கனடாவில் மாவை சேனாதிராசாவுடன் விருந்து சாப்பிடுவதற்கு 10 ஆயிரம் ரூபா டிக்கட்டு!

•கனடாவில் மாவை சேனாதிராசாவுடன்
விருந்து சாப்பிடுவதற்கு 10 ஆயிரம் ரூபா டிக்கட்டு!
நாட்டில் வாக்கு போட்ட மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள்.
காணாமல் போனவர்களின் உறவுகள் 200 நாட்களாக போராடுகிறார்கள்.
கேப்பாப்புலவில் மக்கள் தமது நிலத்திற்காக போராடுகிறார்கள்.
இரணைதீவில் மக்கள் தமது சொந்த நிலத்தில் குடியேறுவதற்கு போராடுகிறார்கள்.
இந்த மக்கள் போராட்டம் எதிலும் பங்கு பற்றாமல்
கனடா சென்றதும் அல்லாமல் அங்கு தனக்கு
நிதி சேகரிப்பில் மாவை சேனாதிராசா ஈடுபட்டுள்ளார்.
மாணவி வித்யா வழக்கு விசாரணையில் இருந்து தப்புவதற்காக கனடா சென்றவர்
இப்போது தனது பயண செலவுக்கு என்று பணம் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அவருடன் சேர்ந்து இரவு உண்ண ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா டிக்கட் போட்டு வசூல் செய்கிறார்.
காரைநகரில் ஒரு மாவீரரின் வயதான தாய் கடன் காரணமாக குடியிருந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அந்த தாயாருக்காக இந்த மாவை சேனாதிராசா பணம் திரட்டவில்லை. சாதாரண உணர்வுள்ள மக்களே பணம் திரட்டி அந்த தாய்க்கு உதவியுள்ளனர்.
5 கோடி ரூபா சொகுசு வாகனத்தில் திரிபவரும், 3 சொகுசு பங்களாவில் வாழ்பவருமான மாவை சேனாதிராசாவுக்கு எதற்கு பணம் திரட்டி கொடுக்க வேண்டும்?
இதுவரை அவருக்கு வழங்கப்பட்ட பணம் எவ்வளவு?
அவருடைய கட்சிக்கு வழங்கப்பட்ட பணம் எவ்வளவு?
இதுபற்றிய கணக்கு வழக்குகளை மாவை சேனாதிராசாவோ அல்லது கனடா தமிழரசுக்கட்சியோ மக்கள் முன் வைக்குமா?
தமிழ்தேசிய கூட்டமைப்பு பெயரால் இது நடக்கிறது.
ஆனால் அதில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சிகள் தமக்கு இதில் எந்த நிதியும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளன.
மிகப் பெரிய மோசடி நடக்கிறது. இதற்கு மாவை சேனாதிராசா மட்டுமல்ல கனடா தமிழரசுக்கட்சியும் பொறுப்பாகும்.
குறிப்பு-
கனடா வாழ் தமிழ் மக்களே!
இந்த அயோக்கியர்களிடம் கணக்கு கேளுங்கள்.
இனி எந்த தலைவரும் கனடா வருவதற்கு அஞ்சும் அளவிற்கு கேளுங்கள்.
இடம் - Anjappar Restaurant, 3090 Eglinton Ave E, Scarborough, ON M1J 2H1.
காலம் - செப்தெம்பர் 8,2017 (வெள்ளிக் கிழமை)
நேரம் - மாலை 6.30 மணி
அன்பளிப்பு டொலர் 100
பங்கு கொள்ள விரும்புவோர் என்னோடு தொடர்பு கொள்ளவும்.
416 281 1165 - Velluppillai Thangavelu

No comments:

Post a Comment