Tuesday, September 12, 2017

•சிரித்துக்கொண்டே களம் காணும் வளர்மதி!

•சிரித்துக்கொண்டே களம் காணும் வளர்மதி!
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த
மாணவி வளர்மதியை கைது செய்தார்கள்
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தார்கள்
சிறையில் நிர்வாண சோதனை என்று சித்திரவதை செய்தார்கள்.
நக்சலைட் தீவிரவாதி என்று பொய் பரப்பினார்கள்
அவர் குடும்பத்தையே பொலிஸ் மூலம் மிரட்டினார்கள்
இத்தனை செய்தும் அவர் அசரவில்லை.
அவர் மனம் தளரவில்லை, உறுதி குன்றவில்லை.
அவரின் போராட்ட உணர்வு மங்கிவிட வில்லை
60 நாட்கள் சிறைவாசத்தின் பின் வேறு வழியின்றி
அவரை விடுதலை செய்தள்ளது தமிழக அரசு.
விடுதலையானதும் அவர் வீடு செல்ல வில்லை.
நேராக நீட் போராட்ட களத்திற்கு வந்துள்ளார்.
அவர் சிறையில் இருக்கும்போதும் சிரித்தக் கொண்டிருந்தார்.
அவர் களத்தில் இருக்கும்போதும் சிரித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் சிரிப்பை பார்க்கும்போது “போராட்டம் இன்பமயமானது” என்ற கூற்று உண்மைதான் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

No comments:

Post a Comment