Tuesday, September 12, 2017

தோழர் பொழிலன் அவர்களின் கருத்துகள்.

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் added 4 new photos.
•நான் எழுதிய “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூல் குறித்து தோழர் பொழிலன் அவர்களின் கருத்துகள்.
நான் எனது நூலை தோழர் பொழிலன் அவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தேன். உடனேயே அதனைப் படித்து தன் கருத்துகளை எனக்கு அறிய தந்துள்ளார்.
தோழர் பொழிலன் தமிழ் அறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களின் மகன். தோழர் தமிழரசன் பாதையை அவர் முன்னெடுத்தமையினால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர்.
எனது நூலைப் படித்து தன் கருத்துகளை உடனடியாக தெரிவித்த தோழர் பொழிலன் அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழர் பொழிலன் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
அன்புத் தோழருக்கு,
வணக்கம்.
தங்கள் மின்னஞ்சலைத் திறந்து, நூலை மேலோட்டமாக முழுமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டேன்.
தங்களால்மட்டுமே சொல்ல இயலுமான கடந்த கால நிகழ்வுகளை, வரலாற்றுக் குறிப்புகளை விடுபாடு இல்லாமல் தொகுத்து விரிவாக எழுதியுள்ளீர்கள்.
மிகவும் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்திலிருந்து ஆதரவு பெற்றும், போராட்டங்களில் ஈடுபாடு கொண்டிருந்தும் இப்போது மேலைநாடுகளுக்குப் போய்க் குடியேறியிருக்கிற எண்ணற்ற ஈழத் தமிழர்கள் போல் அமைந்திராமல், ஈழ விடுதலை குறித்தும், தமிழக விடுதலைக் களப் போராளிகளை - குறிப்பாக நம் அருமைத் தோழர் தமிழரசனைப் பற்றியும் தாங்கள் தொடர்ந்து பதிவுகள் செய்வதும், இந்திய வெறி அரசின் கயமைப் போக்குகளைக் கடுமையாக அம்பலப் படுத்திச் சாடி வருவதுமான நடைமுறைக்குப் பெருத்த மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரித்துக் கொள்கிறேன்.
தாங்கள் நேரில் பேசுவது போன்றதான ஓட்டத்திலேயே நூலின் எழுத்தோட்டம் இருப்பது சிறப்பாக உள்ளது.
தேர்தல் அரசியல் கட்சியினரின் தோழர் தமிழரசன் குறித்த பார்வைகளைத் தெளிவுபடக் காட்டியுள்ளீர்கள்.
தங்களின் விரிவான அரிய முயற்சிக்கு மீண்டும் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரித்துக் கொள்கிறேன்.
உங்களின் பணிகள் தொடர்பாக விரைந்து எழுதுவதாக நூலை முடிக்கும் போது குறிப்பிட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி. எழுதுங்கள்.
முழுமையாகப் படித்துவிட்ட பின் ஏதேனும் எழுத தேவையிருந்தால் உறுதியாக எழுதுவேன்.
நன்றி.
தோழமையுடன்,
பொழிலன்
3/9/2017

No comments:

Post a Comment