Tuesday, September 12, 2017

தூக்கி வீசப்பட்ட கறிவேப்பிலையை மீண்டும் கறிக்கு பயன்படுத்துவதில்லை

•தூக்கி வீசப்பட்ட கறிவேப்பிலையை
மீண்டும் கறிக்கு பயன்படுத்துவதில்லை
இதை கருணா எப்போது புரிந்துகொள்ளப் போகிறார்?
செய்தி- போர்க்குற்றம் பற்றி சரத் போன்சேகா பேசுவது தேசத்துக்கும், ராணுவத்துக்கும் பெரிய அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது – கருணா
கறிவேப்பிலை கறிக்கு பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும். அவ்வாறு தூக்கியெறியப்படும் கறிவேப்பிலையை பின்னர் கறிக்கு பயன்படுத்தப் படுவதில்லை.
கறிவேப்பிலை போல் தாம் பயன்படுத்தும் தமிழர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதே இலங்கையில் ஆளும் சிங்கள கட்சிகளின் வழமையாகும்.
அவ்வாறு பயன்படுத்திவிட்டு தூக்கியெறியப்பட்ட ஒரு தமிழராக முன்னாள் அமைச்சர் கருணா இருக்கிறார். ஏனோ அது இன்னும் அவருக்கு புரியவில்லை.
பாதிக்கப்பட்ட பல தமிழர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் இராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரியா மீது வழக்கு தாக்கல் செய்யப்ட்டுள்ளது.
இந்த வழக்கை சில மற்றஇன மனிதவுரிமை ஆர்வலர்கள் முன்வந்து தாக்கல் செய்துள்ளனர்.
இந்த இனப் படுகொலையாளிகள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று ஜ.நா வாசலில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் தளபதி சரத்பொன்சேகா சில உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். அவையாவன,
(1) இசைப்பிரியா உட்பட பல சரணடைந்து முகாமுக்கு அனுப்பப்பட்டவர்களை மீண்டும் அழைத்து வந்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கு ஜெகத் ஜெயசூரியாவே பொறுப்பு.
(2) நீர்கொழும்பில் தண்ணீருக்காக போராடிய மக்கள் மீது சுட உத்தரவிட்டவரும் இதே ஜெகத்சூரியாவே.
(3) வெலிக்கடை சிறையில் நடந்த படுகொலைகளுக்கும் உத்தரவிட்டவர் இந்த ஜெகத்சூரியாவே.
சரத் பொன்சேகா இவ்வாறு கூறியதுடன் இதனை எங்கு வந்தும் சாட்சியமளிக்க தான் தயார் என்றும் கூறியுள்ளார்.
உண்மையில் இவ்வாறு கூறவேண்டியவர் தமிழரான கருணாவே. ஆனால் அவர் அவ்வாறு கூற முன்வராதது மட்டுமன்றி அவ்வாறு கூறுபவரால் சிங்கள ராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுவிட்டது என்று கவலைப் படுகிறார்.
இதில் வேதனை என்னவென்றால் இப்படி கூறும் கருணாவை முதலமைச்சராக்கினால் முஸ்லிம்களிடமிருந்து தமிழருக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று சில தம்பிமார் சொல்லிக் கொண்டு திரிவதுதான்.

No comments:

Post a Comment