Tuesday, September 12, 2017

•அரசே! நடிகை காவ்யாவை ஏன் கைது செய்யவில்லை?

•அரசே!
நடிகை காவ்யாவை ஏன் கைது செய்யவில்லை?
நடிகை பாவனாவை கடத்தி பாலியல் சித்திரவதை செய்த வழக்கில் நடிகர் திலீப் உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணையில் இவ் கடத்தல் மற்றும் பாலியல் சித்திரவதை சம்பவத்தில் நடிகை காவ்யாவும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஆதாரங்கள் மற்றும் விசாரணைகள் மூலம் நடிகை காவ்யா சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தும் தனது செல்வாக்கின் மூலம் கைது செய்யப்படுவதிலிருந்து அவர் தப்பி வருகிறார்.
உங்களுக்கு இதைப் படிக்கும்போது மாணவி வித்யா வழக்கில் அமைச்சர் விஜயகலா கைது செய்யப்படாமல் தப்பி இருப்பது நினைவுக்கு வரக்கூடும்.
அதேபோல் இத்தனை நாளும் அமைச்சர் விஜயகலாவை ஏன் கைது செய்யவில்லை எனக் கேட்டு வந்த நான் திடீரென்று ஏன் நடிகை காவ்யாவைக் கைது செய்யவில்லை என கேட்கிறேன் என்று குழப்பம் வரும்.
வேறு ஒன்றுமில்லை. அமைச்சர் விஜயகலா பற்றி எழுதினால் விஜயகலாவுக்கு கோபம் வருகிறதோ இல்லையோ அவருடைய மச்சானுக்கு கோபம் வருகிறது
எனவேதான் எதற்கு வீண் பிரச்சனை என்று காவ்யாவை கைது செய்யும்படி கேட்கிறேன்.
விஜயகலாவின் கணவர் மகேஸ்வரனின் தம்பி துவாரகேஸ்வரன் என்மீது கோபம் கொள்கிறார். என்னை “நாயே” என்று திட்டுகிறார். முடியுமென்றால் நாட்டுக்கு வா என்று சவால் விடுகிறார்.
நான் ஏதும் தவறாக எழுதியிருந்தால் அதை அவர் தாரளமாக சுட்டிக்காட்டியிருக்கலாம். அதைவிடுத்து மிரட்டல் மூலம் என்னை பணிய வைக்க முயல்கிறார்.
நான் இதுவரை பலருடைய தவறுகள் குறித்து விமர்சனம் செய்துள்ளேன். ஆனால் யாரும் இவரைப் போல் என்னை மிரட்டியதில்லை.
மாணவி வித்யா கொலையில் சம்பந்தப்பட்டதோடு அல்லாமல் அது குறித்து பேசுபவர்களை மிரட்டவும் முனையும் இவர்களின் தைரியத்திற்கு என்ன காரணம்?
குறிப்பு- துவாரகேஸ்வரன் அவர்களே!
(அ)சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது என முடிவு செய்துள்ளேன்.
உங்கள் சவாலை ஏற்றுக்கொள்கிறேன். தாராளமாக நாட்டுக்கு வந்து உங்கள் இடத்தில் உங்களை சந்திக்கிறேன்.
ஆனால் ஒரு நிபந்தனை, எனது பயண செலவை பொறுப்பேற்க வேண்டும்.
என்ன டீல் ஓகே யா?

No comments:

Post a Comment