Tuesday, September 12, 2017

•ஈழத் தமிழர்களுக்கு இந்தியா உதவும் என்று 34 வருடமாக கனவு காணும் தமிழ் தலைவர்கள்!

•ஈழத் தமிழர்களுக்கு இந்தியா உதவும் என்று
34 வருடமாக கனவு காணும் தமிழ் தலைவர்கள்!
“இலங்கை தமிழர்களை இந்தியா ஒருபோதும் கைவிடப் போவதில்லை. வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு நீதியும் நிரந்தரமுமான அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக இந்தியா தொடர்ந்து பாடுபடும்” என இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த உறுதிமொழியை சுஷ்மாவே நூறு தடவைக்கு மேல் கூறிவிட்டார். இதே உறுதி மொழியைத்தான் இவருக்கு முன்னர் இருந்த வெளியுறவு அமைச்சர்களும் கூறியிருக்கிறார்கள்.
கடந்த 34 வருடங்களாக இதே உறுதிமொழியைத்தான் 1000 தடவைகளுக்கு மேல் இந்தியா கூறியுள்ளது.
இதைக் கேட்டு கேட்டு தமிழ் மக்கள் சலித்து விட்டார்கள். இதை பிரசுரித்து பிரசுரித்து ஊடகங்களுமகூட் சலித்து விட்டன.
ஆனால் தமிழ் தலைவர்களோ “இந்தியா தமிழர்களுக்கு உதவும”; என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் இந்த உறுதிமொழியை கேட்டவுடன் தமிழ் மக்களுக்கு இந்தியா உதவப் போவதாக நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் இதேவேளையில் இந்தியா இரண்டாவது யுத்தக் கப்பலை இலங்கைக்கு நேற்றைய தினம் வழங்கியுள்ளது.
இதேபோன்ற ஒரு பாரிய யுத்தக் கப்பலை கடந்த வருடம் இந்தியா இலங்கைக்கு வழங்கியிருந்தது.
யுத்தம் அற்ற நிலையில் எதற்காக இந்தியா யுத்தக் கப்பல்களை இலங்கைக்கு இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது என்று இந்த கனவு காணும் தமிழ் தலைவர்கள் கேட்க வில்லை.
தமிழக மக்களின் வரிப்பணத்தில் எதற்காக இலங்கைக்கு இலவசமாக யுத்தக் கப்பல்களை வழங்க வேண்டும் என்று தமிழக தலைவர்களும் கேட்கவில்லை.
கடந்த வருடம் சென்னையில் வெள்ள அழிவு வந்தபோது 50 அயிரம் கோடி ரூபா பணம் வழங்குமாறு முதலமைச்சர் ஜெயா அம்மையார் கேட்டார்.
தமிழக மக்களிடம் வருடம் தோறும் 85 ஆயிரம் கோடி ரூபாவை வரியாக பெறும் இந்திய அரசு வெள்ள நிவாரணத்திற்கு வெறும் 6 ஆயிரம் கோடி ரூபாவையே வழங்கியது.
இந்த வருடம் வறட்சி காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 90 க்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். தமக்கு நிவாரணம் வழங்குமாறு அவர்கள் போராடுகிறார்கள்.
ஆனால் இந்திய அரசோ தமிழக மக்களுக்கு உதவி செய்யாமல் தமிழக மக்களின் பணத்தில் இலங்கைக்கு யுத்தக் கப்பல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது.
இதே தமிழக மக்களின் வரிப் பணத்தில்தான் தமிழக மீனவர்களை கொல்லும் இலங்கை கடற்படைக்கு இந்திய அரசு பயிற்சி வழங்கிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு இந்தியா தொடர்ந்து தமிழர்களை வஞ்சித்து வருகிறது. ஆனால் தமிழ் தலைவர்களோ இந்தியா உதவும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.
என்ன செய்வது? இவர்கள் கனவு கலைவது எப்போது?

No comments:

Post a Comment