Tuesday, September 12, 2017

பகிரதன் தனது சண்டித்தனத்தை மகிந்த ராஜபக்ச மீது காட்டியிருக்கலாமே?

பகிரதன் தனது சண்டித்தனத்தை
மகிந்த ராஜபக்ச மீது காட்டியிருக்கலாமே?
40 ஆயிரம் தமிழ்மக்களை முள்ளிவாய்க்காலில் கொன்ற மகிந்த ராஜபக்ச மீது காட்ட முடியாத வீரத்தை, அப்பாவி தமிழ் ஊடகவியலாளர் மீது காட்டியிருக்கிறார் அமிர்தலிங்கத்தின் மகன் பகிரதன்.
மகிந்த ராஜபக்சவின் முன் கைகட்டி பவ்யமாக இருந்தவர் தமிழ் ஊடகவியலாரை பாய்ந்து தாக்கி தன் வீரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அமிர்தலிங்கம் முன்னர் என்ன செய்தாரோ அதையேதான் மகன் பகிரதனும் தற்போது செய்கிறார்.
தனது தந்தை அமிர்தலிங்கம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தலைவராக பகிரதன் கருதுகிறாரா?
அமிர்தலிங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்ட ஒரு தமிழனுக்கு அதுவும் ஊடகவியலாளனுக்கு உரிமை இல்லையா?
கேள்வி கேட்கும் தமிழ் ஊடகவியலாளரை தாக்கும் உரிமையை பகிரதனுக்கு யார் வழங்கியது?
பொலிஸ் நிலையத்தில் பகிரதன் மீது வழக்கு பதிவு செய்தும் இன்னும் அவர் மீது பொலிசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
சுற்றுலா விசாவில் செல்பவர் அரசியல் நிகழ்வில் பங்குபற்ற முடியாது என்று விதி இருந்தும் பகிரதன் அரசியல் நிகழ்வில் பங்குபற்ற பொலிசார் எப்படி அனுமதித்தனர்?
வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்துவரும் பகிரதன் இலங்கை வந்து ஒரு இலங்கை பிரஜையை தாக்குவதை இலங்கைபொலிஸ் ஏன் வேடிக்கை பார்க்கிறது?
யார் இந்த பகிரதன்?
யாழ் மாணவர்களை தரப்படுத்தலுக்கு எதிராக போராட சொல்லிவிட்டு தனது மகன் பகிரதனுக்கு மதுரை மருத்துவ கல்லூரியில் அனுமதி பெற்றுக் கொடுத்தவர் அமிர்தலிங்கம்
எம்.ஜி.ஆர் தயவில் மதுரையில் மருத்துவப் படிப்பு படித்துக்கொண்டிருக்கும்போது இயக்கம் நடத்தியவரே இந்த பகிரதன்.
தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்க வேண்டாம் என்று இந்திரா காந்தியிடம் கேட்ட அமிர்தலிங்கம், அதேவேளையில் தனது மகன் பகிரதன் ஆயுத இயக்கம் நடத்தியதை தடுக்கவில்லை.
தாங்கள் ஜனநாயக தலைவர்கள் என்று சொல்லிக்கொண்ட அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்கரசி மலேசியா சென்று தனது மகனின் ஆயுத இயக்கத்திற்கு பணம் சேகரித்தார்.
இவருடைய இயக்கத்திற்கு தமிழ்இளைஞர்களை திரட்டி அனுப்பியவர்; இன்றைய தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா.
இளைஞர்களை படிப்பை விட்டிட்டு போராட்டத்திற்கு வரும்படி அழைத்த பகிரதன் தன்படிப்பை ஒருபோதும் கைவிடவில்லை.
தமிழ் இளைஞர்களை திரட்டி அனுப்பிய மாவை சேனாதிராசாவும் தம் பிள்ளைகளை ஒருபோதும் இயக்கத்திற்கு அனுப்பவில்லை
இயக்கத்தில் இருந்த இளைஞர்களுக்கு சாப்பாடுகூட போடாமல் இருந்தவர் இந்த பகிரதன். அதனால் அந்த இளைஞர்கள் அனைவரும் அப்படியே புலிகள் அமைப்பில் போய்சேர்ந்து விட்டனர்.
தனது படிப்பை முடித்தவிட்டு லண்டனில் குடியேறிய பகிரதன் ஒருபோதும் ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டதில்லை.
முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்தபின் இலங்கை சென்ற பகிரதனும் அவரது தாயார் மங்கையர்கரசியும் இறந்துபோன தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை.
மாறாக தமது பாதுகாப்பு பணி புரிந்த சிங்கள பொலிசாரின் வீட்டுக்கு தேடிச்சென்று நன்றி தெரிவித்தார்கள்.
இப்படிப்பட்டவர்கள் இன்னும் திருந்தவில்லை. இனியும் திருந்தப் போவதில்லை என்பதையே ஊடகவியலாளர் மீதூன தாக்குதல் காட்டுகிறது.

No comments:

Post a Comment