Tuesday, September 12, 2017

200 வதுநாள்!

200 வதுநாள்!
200 வதுநாள் என்று பெருமையாக போடுவதற்கு இது தல அஜீத் நடித்த படமும் இல்லை. அல்லது தளபதி விஜய் நடித்த படமும் இல்லை.
இது காணாமல் போனவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் நடத்தும் கவனயீர்ப்பு போராட்டம்.
இவர்களிடம் வாக்குபெற்று பதவியைப் பெற்றவர்களோ 5 கோடிரூபா சொகுசு வாகனத்தில் பவனி வந்துகொண்டிருக்கின்றனர்.
இவர்களின் வாக்கில் ஜனாதிபதியான எளிமையான தலைவர் மைத்திரியாரோ 60 கோடிரூபா சொகுசுகாரில் பவனிவருகிறார்.
வாக்குபோட்ட இவ் மக்களோ 200 வது நாளாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
200 வதுநாளாக போராடும் இம் மக்களில் இதுவரை 3 பேர் போதிய மருத்தவ சிகிச்சையின்றி மரணமடைந்துள்ளனர்.
ஆனால் நாட்டின் சுகாதரஅமைச்சருக்கு ஒருகோடிரூபா செலவில் சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மக்கள் ஈழத்தில் தமிழ் இனத்தில் பிறந்ததைத் தவிர வேறு என்ன தவறு செய்துள்ளார்கள்?
இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை?

No comments:

Post a Comment