Tuesday, September 12, 2017

காசி ஆனந்தன் அய்யா மகளும் டாக்டர் கிருஸ்ணசாமி மகளும்!

காசி ஆனந்தன் அய்யா மகளும்
டாக்டர் கிருஸ்ணசாமி மகளும்!
“நீட்” டால் மாணவி அனிதாவின் கனவு கலைந்தது. ஒரு மாணவியின் கல்வி மறுக்கப்படுவதன் வலியை ஈழத் தமிழராகிய நாம் நன்கு உணர்வோம்.
இதேபோலத்தான் மருத்துவகல்விக்கு தேவையான புள்ளிகள் எடுத்திருந்தும் மாணவி நந்தினிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
மாணவி நந்தினி ஒரு ஈழ அகதி என்பதால் அவருக்கு மருத்துவ கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது.
மாணவி நந்தினி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதி கிடைக்கவில்லை.
மாணவி அனிதாவுக்கு எப்படி நியாயம் கிடைக்கவில்லையோ அதேபோல் அகதி மாணவி நந்தினிக்கும் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்க வில்லை.
இன்று பாஜக வுக்காக பேசும் டாக்டர் கிருஸ்ணசாமி தன் மகளுக்கு ஜெயா அம்மையாரிடம் மருத்துவ சீட்டு பெற்றுள்ளார்.
அவர் தன் மகளுக்கு சீட் கேட்டுப் பெற்றவர் அதை மறந்து மாணவி அனிதாவுக்கு எதிராக பேசுகிறார்.
அதேபோல இன்று மோடி அரசுக்கு ஆதரவாக பேசும் காசிஆனந்தன் அய்யாவும் தன் மகளுக்கு மருத்துவ சீட்டு வாங்கியவர்
அகதி மாணவி நந்தினிக்கு மருத்துவ கல்வி வாய்ப்பை மறுத்த அதே தமிழக அரசுதான் காசி அனந்தன் அய்யாவின் மகளுக்கு அனுமதி வழங்கியது.
தனது ஒரு மகளுக்கு அல்ல இரண்டு மகள்களுக்குமே மருத்துவ கல்வி வாய்ப்பு வாங்கிய காசிஆனந்தன் அய்யா அகதி மாணவி நந்தினிக்கு வாங்கிக் கொடுக்க முன்வரவில்லை.
இன்று இந்திய அரசிடம் இந்து தமிழீழம் கேட்கும் காசி அய்யா அகதி மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பை கேட்க மறுக்கிறார்.
இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தாராளமாக சலுகைகள் பெறட்டும். ஆனால் அதற்காக அரசை நியாயப்படுத்த முயலக்கூடாது.
ஏழை மாணவர்களின் சாபம் பொல்லாதது!

No comments:

Post a Comment