Tuesday, September 12, 2017

•ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்

•ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்
தோழர் தமிழரசனின் 30 வது நினைவு தினமான இன்று நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் வெளிவந்துள்ளது.
இந்நூல் உரிமையை மக்களுக்கு வழங்கியுள்ளேன். எனவே இதனை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ யாரும் பயன்படுத்தலாம்.
எனது அனுமதி கோர வேண்டியதில்லை.
இந்த நூலை பெற்றுக் கொள்ளும் விபரம் விரைவில் அறிய தருகிறேன்.
தோழர் தமிழரசனுடனான எனது அனுபவங்களை கீழ்வரும் தலைப்புகளில் எழுதியுள்ளேன். (மொத்தம் 163 பக்கங்கள்)
•தோழர் தமிழரசன்- ஒரு சுருக்க அறிமுகம்
•தோழர் தமிழரசன் பயங்கரவாதியா?
•தோழர் தமிழரசனும் அவர் பின்பற்றிய தத்துவங்களும்
•தோழர் தமிழரசனும் சாதீயத்திற்கு எதிரான போராட்டமும்
•தோழர் தமிழரசனும் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பும்
•தோழர் தமிழரசனை வஞ்சனையால் கொன்ற இந்திய அரசு
•தோழர் தமிழரசன் பற்றி புலவர் கலியபெருமாள்
•தோழர் தமிழரசன் பாதையில் பயணித்த தோழர் சுந்தரம்
•தோழர் தமிழரசன் பற்றி உரையாடல் மற்றும் குறிப்புகள்
தோழர் தமிழரசனுடன் சேர்ந்து பயணித்தமைக்காக இந்திய உளவுப்படையின் உத்தரவுப்படி ஈரோஸ் இயக்கத்தால்; கொல்லப்பட்ட தோழர் நெப்போலியனுக்கு இந் நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக தமிழர்கள் மட்டுமன்றி ஈழத் தமிழர்களும் தோழர் தமிழரசனை அறிந்து கொள்ள இந் நூல் உதவும் என நம்புகிறேன்.
இந் நூல் வெளிவர ஊக்கமும் உதவியும் புரிந்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.

No comments:

Post a Comment