Tuesday, September 12, 2017

மாணவி அனிதா இது தற்கொலை அல்ல மத்திய மாநில அரசுகள் செய்த கொலை

•மாணவி அனிதா
இது தற்கொலை அல்ல
மத்திய மாநில அரசுகள் செய்த கொலை
ஒரு ஏழை தமிழ் மாணவி தான் மருத்துவராக வேண்டும் என்று தமிழ்நாட்டில் கனவு காணக்கூடாதா?
அந்த தமிழ் மாணவி மாநில அரசை நம்பினார். மத்திய அரசை நம்பினார். இறுதியாக உச்ச நீதிமன்றத்தையும் நம்பினார்.
யாருமே அவருக்கு உதவவில்லையே. எல்லோரும் சேர்ந்து அந்த மாணவியை கொன்று போட்டார்களே.
இன்னும் எத்தனை மாணவி அனிதாக்கள் இந்த நீட் தேர்விற்காக பலியாக வேண்டும்?
எல்லா அனிதாக்களும் தாங்களாகவே தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம்.
அனிதாக்கள் போராடும் மாணவி வளர்மதியாக மாறுவார்கள்.
ஆனால் எல்லா வளர்மதிகளையும் சிறையில் அடைத்துவிட முடியும் என எண்ணி விடாதீர்கள்.
அனிதாக்கள் கரும்புலி தாணுவாக மாறி பழிவாங்க முனைந்தால் என்னாகும் என்பதை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.
ஓர் உரையாடல்,
தமிழிசை (பா.ஜ.க) – சார் விஜய் டிவியா?
விஜய் டிவி- ஆமாம் மேடம். என்ன விடயம்?
தமிழிசை (பா.ஜ.க) - இந்த பிக்பாஸ் நிகழ்வில் மீண்டும் ஓவியாவை கொண்டு வரமுடியாதா?
விஜய் டிவி- ஏன் மேடம்? என்ன பிரச்சனை?
தமிழிசை (பா.ஜ.க) - இந்த மாணவி அனிதா செத்துப் போச்சு. மக்கள் கொந்தளிப்பாக இருப்பதாக உளவுப்பிரிவு றிப்போர்ட் சொல்லுது. அதுதான் மக்களின் கவனத்தை திசைதிருப்ப வேண்டும்.
விஜய் டிவி- சாரி மேடம், இப்ப பிக்பாஸ் ரேட்டிங் ரொம்ப விழுந்து போச்சு. நீங்க வேணும்னா நளினியை பரோலில் விடுதலை செய்து பாருங்களேன்.
தமிழிசை (பா.ஜ.க) ஆங் அது நல்ல ஜடியாதான். ஆனால் முகநூலில் உடனே கழுவி ஊத்துவாங்களே. பார்ப்பம்.
(யாவும் கற்பனை அல்ல)

No comments:

Post a Comment