Tuesday, September 12, 2017

செத்த மாட்டில் இருந்து கழன்று போகும் உண்ணிகள் !

செத்த மாட்டில் இருந்து
கழன்று போகும் உண்ணிகள் !
மாடு உயிருடன் இருக்கும்வரை அதில் ஒட்டி இருந்து ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் உண்ணிகள், மாடு செத்தவுடன் அதில் இருந்து நைசாக கழன்று விடுகின்றன.
அதுபோல் புலிகள் பலமாக இருக்கும்வரை அவர்களுடன் ஒட்டி இருந்து பதவி நலன்களை அனுபவித்தவர்கள் இன்று புலிகள் இல்லை என்றவுடன் உண்ணிகள் போல் கழன்று விடுகின்றனர்.
உண்ணிகள் போல் கழன்றுவிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம்கூட நன்றி இல்லாமல் புலிகளை தூற்றுகின்றனர்.
இதோ இந்த படத்தில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் பின்னால் பைல் கட்டுகளை தூக்கிக்கொண்டு வரும் முதியவர் யார் என்று தெரிகிறதா?
இவர்தான் இன்றைய எதிர்கட்சிதலைவர் சம்பந்தன் அய்யா. புலிகளே தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு அந்தக்காலம் அடிக்கடி வன்னி சென்று வந்தவர்.
அவர் இப்போது கூறுகிறார் தான் இப்போது சுதந்திரமாக திரிகோணமலை சென்றுவர மகிந்த ராஜபக்சவே காரணம் என்று.
அதாவது புலிகளை அழித்து தான் சுதந்திரமாக சென்றுவர மகிந்த ராஜபக்ச தனக்கு உதவியுள்ளதாக அவர் கூறுகிறார்.
மகிந்த செய்தது இனப் படுகொலை என தமிழ் மக்கள் கூறி வருகிறார்கள். ஆனால் தலைவர் சம்பந்தர் அய்யா மகிந்த தனக்கு சுதந்திரம் பெற்று தந்தவர் என்கிறார்.
திருகோணமலைக்கு 2 ஜீப் வண்டி நிறைந்த பொலிஸ் பாதுகாவலர் சகிதம் சென்று வரும் சம்பந்தர் அய்யா தான் சுhந்திரமாக சென்று வருவதாக கூறுகிறார்.
ஒரு தமிழ் தலைவர் தமிழ் பகுதிக்கு 20 பொலிஸ் பாதுகாப்புடன் செல்வது எப்படி சுதந்திரமாக சம்பந்தர் அய்யாவுக்கு தெரிகிறது?
எந்தவித பாதுகாப்பும் இன்றி தனியாக வன்னிக்கு சென்று வந்த சம்பந்தர் அய்யா அதை ஏன் சுதந்திரமானது இல்லை என கருதுகிறார்?
சுதந்திரம் என்பதற்கு அய்யா என்ன விளக்கம் வைத்திருக்கின்றார் என்று புரியவில்லை. ஆனால் தான் சுதந்திரமாக சென்றுவர மகிந்த உதவினார் என்று கூறியதன் மூலம் தமிழ் மக்கள் முகத்தில் கரியை பூசியுள்ளார்.
பாவம் தமிழ் மக்கள்!

No comments:

Post a Comment