Tuesday, September 12, 2017

பொலிஸ் மக்களின் நண்பன் இல்லை

பொலிஸ் மக்களின் நண்பன் இல்லை.
அது எப்போதும் அரசின் ஏவல் நாய்!
அமைதியாக போராடும் மாணவர்கள் மீது பொலிஸ் அடக்குமுறையை ஏவிவிட்டுள்ளது தமிழக அரசு.
நீட் தேர்வை நீக்குமாறு போராடும் மாணவர்களை தடியடி செய்து கலைக்கிறது பொலிஸ்.
நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது பொலிஸ்.
பல மாணவர்களின் மீது கொடிய வழக்குகள் பதிவு செய்து அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கின்றது பொலிஸ்.
பொலிஸ் எப்போதும் அரசின் ஏவல்நாய் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
போராடும் மாணவர்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டிய உச்ச நீதிமன்றமோ போராட்டங்களுக்கு தடை விதிக்கிறது.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற ஆணையை மதிக்காமல் செயற்பட்டு வருகிறது கர்நாடக அரசு.
ஆனால் கர்நாடக அரசு மீது இதுவரை இந்த உச்சநீதிமன்றம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பொலிஸ், நீதிமன்றம், அரசு யாவும் தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment