Tuesday, September 12, 2017

காணவில்லை ?

•காணவில்லை ?
கண்டால் தகவல் சொல்லி விடுங்கள்!
போர் வரும். நான் வருவேன் என்று ஒருவர் சொன்னாரே. தமிழகம் போராட்டத்ததால் திணறுகிறது. அவர் ஏன் இன்னும் வரவில்லை?
அவர் நிச்சயம் வருவார் என்று ஒரு தரகர் திருச்சியில் கூட்டம் போட்டு சொன்னாரே. அவரையாவது யாராவது கண்டீர்களா?
பள்ளி மாணவிகள் இருவர் தைரியமாக றோட்டில் மறியல் செய்கிறார்கள். அந்த சுப்பர் ஸ்டார் ஒரு அறிக்கைகூட விடவில்லையே?
நடிகர் விஜய்கூட அனிதா வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறுகிறார். நடிகர் சூரியா அனிதாவிறங்காக குரல் எழுப்புகிறார்.
ஆனால் இந்த வருங்கால முதல்வர் கனவில் இருப்பவர் ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை?
இனி எந்திரன் -2 படம் வெளியாகும்போதுதான் இவர் அறிக்கை விடுவாரா?
நதிகள் இந்த நாட்டின் ரத்த நாளங்கள் என்றும் அதனை இணைக்க வேண்டும் என்று இந்த நடிகர் குரல் கொடுத்துள்ளார்.
இவர் ஏன் காவிரிநதிநீர் வாரியம் அமைக்க வேண்டும் என்று குரல் கொடுக்க மறுக்கிறார்?
அல்லது, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீரை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு கூற தயங்குகிறார்?
இருப்பது தமிழ்நாட்டில், பிழைப்பது தமிழன் பணத்தில். ஆனால் விசுவாசம் மட்டும் கர்நாடகாவிற்கும் கன்னடர்களுக்கும்.
இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நடிகர் தமிழ் மக்களை ஏமாற்ற அனுமதிப்பது?

No comments:

Post a Comment