Wednesday, June 29, 2022

அவுஸ்ரேலியாவில் பிலோயலா கிராமத்தில்

அவுஸ்ரேலியாவில் பிலோயலா கிராமத்தில் வாழ்ந்த தமிழ் குடும்பத்தை கைது செய்து நாடு கடத்த முயன்றது அவுஸ்ரேலிய அரசு. ஆனால் அக் கிராம மக்கள் கடந்த நான்கரை ஆண்டுகளாக தொடர் போராட்டம் செய்து அத் தமிழ் குடும்பத்தை மீண்டும் தங்கள் கிராமத்தில் வாழ வழி செய்துள்ளார்கள். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் இத் தமிழ் குடும்பத்திற்காக போராடிய அந்த அவுஸ்ரேலிய கிராம மக்கள் தமிழ் மொழி பேசுபவர்கள் அல்ல. இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும் அல்ல. ஆனால் இந்தியாவில் தமிழ் மொழி பேசும் தமிழ்நாட்டில் இந்து மதத்திற்காக பாடுபடுவதாக கூறுபவர்களின் ஆட்சியின் கீழ் ஈழ தமிழ் அகதிகள் 23 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கின்றனர். யாருமே கண்டு கொள்ளவில்லை. என்னே கொடுமை இது?

No comments:

Post a Comment