Wednesday, June 29, 2022

செய்தி – தற்கொலைக்கு முயற்சி செய்த அகதிகள்

செய்தி – தற்கொலைக்கு முயற்சி செய்த அகதிகள் மீது தாக்குதல் நடத்தி வழக்கு பதிவு செய்ய முயற்சித்த பொலிசார். நிருபர் - சார்! சிறப்புமுகாமில் அகதிகள் தற்கொலை முயற்சி பற்றி ? திராவிட முதல்வர் - ஆம். உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறேன் நிருபர் - என்ன நடவடிக்கை சார்? திராவிட முதல்வர் - தற்கொலை முயற்சி வழக்கு அவர்கள் மீது போடும்படி கூறியிருக்கிறேன். நிருபர் - கடந்த 35 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்காமைக்கு என்ன காரணம் சார் ? திராவிட முதல்வர் - அதுதான் எமது மகிந்த ராஜபக்சாவின் சிங்கள அரசுக்கு உணவு அனுப்பியுள்ளேனே. நிருபர் - ஈழத் தமிழர் எமது ரத்தம் என்று தேர்தலில் பேசினீர்களே? திராவிட முதல்வர் - அதெப்படி தமிழர் எனது ரத்தம் ஆக முடியும்? எலெக்சனுக்காக பேசுவதை எல்லாம் உண்மை என்று நம்புவதா?

No comments:

Post a Comment