Tuesday, March 22, 2016

•லண்டனில் நடைபெற்ற காலம் சென்ற புஸ்பராசா அவர்களின் 10 வது ஆண்டு நினைவு நிகழ்வு

•லண்டனில் நடைபெற்ற காலம் சென்ற புஸ்பராசா அவர்களின் 10 வது ஆண்டு நினைவு நிகழ்வு
கடந்த 19.03.16 யன்று மாலை 4.30 மணியளவில் லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் காலம் சென்ற புஸ்பராசா அவர்களின் 10 வது ஆண்டு நினைவு நிகழ்வு நடைபெற்றது.
புஸ்பராசாவின் சகோதரி நவரட்ணராணி சிவலிங்கம் அவர்கள் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
புஸ்பராணி, சத்தியசீலன், நித்தியானந்தன், சந்தூஸ், ராகவன், நிர்மலா, சோபாசக்தி, சாந்தன், ஜெயபாலன், சோதிலிங்கம், சிவலிங்கம், யேசுதாசன், குலேந்திரன் மற்றும் பலர் உரையாற்றினார்கள்.
புஸ்பராசா அவர்களின் பங்களிப்புகளை யாவரும் நினைவு கூர்ந்து உரையாற்றினார்கள். குறிப்பாக புஸ்பராசா எழுதிய "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்" நூல் பற்றி பலரும் சுட்டிக் காட்டினார்கள்.
இரவு 8.30 மணியளவில் நிகழ்வு நிறைவு பெற்றது. அனைவருக்கும் நிகழ்வில் சிற்றுண்டிகளும் இரவு உணவும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment