Thursday, March 31, 2016

•இரண்டு வருடங்களுக்கு மேலாக இவர்கள் சிறையில் வாடுவது ஏன்?

•இரண்டு வருடங்களுக்கு மேலாக இவர்கள் சிறையில் வாடுவது ஏன்?
கடந்த 10.03.2014 யன்று கைது செய்யப்பட்ட திருச்செல்வம், தமிழரசன், கவிஅரசு, காளை, ஜோன்மாட்டின், கார்த்திக் ஆகிய ஆறுபேரும் இரண்டு வருடங்களுக்கு மேலாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணையை முடிக்காமல் வேண்டுமென்றே தாமதம் செய்வதுடன் இவர்களுக்கு ஜாமீன் வழங்காமலும் அடைத்து வைத்திருக்கின்றனர்.
கொடிய சிறையில் நீண்ட நாட்கள் அடைத்து வைக்க இவர்கள் செய்த குற்றம் என்ன?
அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழகம் விடுதலை பெற வேண்டும் என விரும்பியது குற்றமா?
தோழர் தமிழரசன் பாதையில் தமிழக விடுதலைக்கு போராடியது குற்றமா?
ஈழத் தமிழின அழிவுக்கு எதிராக குரல் கொடுத்தது குற்றமா?
•60 கோடிரூபா மக்கள் பணத்தை ஊழல் செய்த ஜெயா அம்மையார் விடுதலை
•சங்கர ராமனை கொலை செய்த காஞ்சி சங்கராச்சாரியார் விடுதலை
•16 ஆயிரம் கோடி ரூபா கிரினைட் கொள்ளையன் பி.ஆர்.பழனிச்சாமி விடுதலை
•6 லட்சம் கோடி ரூபா தாது மணல் கொள்ளையன் வைகுண்டராசன் விடுதலை
ஆனால் தமிழ் மக்களுக்காக போராடியவர்கள் விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைக்கப்படுகிறார்கள்.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்கிறார்கள்.
ஆனால் இங்கே குற்றவாளிகள் தப்புகிறார்கள். அப்பாவிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.
இந்த ஆறுபேரின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்.
சிறையில் அடைப்பதன் மூலம் தமிழ் இன உணர்வை மழுங்கடிக்க முடியாது என்பதை காட்டுவோம்.

No comments:

Post a Comment