Tuesday, March 22, 2016

•முன்னாள் முதல்வர் இந்தியா உதவவில்லை என்கிறார். இந்நாள் முதல்வர் இந்தியா உதவ வேண்டும் என்கிறார்.

•முன்னாள் முதல்வர் இந்தியா உதவவில்லை என்கிறார்.
இந்நாள் முதல்வர் இந்தியா உதவ வேண்டும் என்கிறார்.
இந்தியா சமஸ்டி அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள உதவவில்லை என்று இந்தியாவின் அரவணைப்பில் இருக்கும் முன்னாள் மாகாண முதல்வர் வரதராஜப் பெருமாள் கூறியிருக்கிறார்.
ஆனால் சமஸ்டி அதிகாரங்களை பெறுவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று இந்நாள் முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் கேட்டிருக்கிறார்.
இந்தியா தமிழ் மக்களுக்கு இதுவரை உதவவில்லை. இனியும் உதவப் போவதில்லை. எனவே மீண்டும் மீண்டும் இந்தியா உதவ வேண்டும் என்று கேட்பதன் மர்மம் என்ன?
தமிழ்மக்கள் மீதான இத்தனை அழிவுக்கும் காரணமான இந்தியா உதவவேண்டும் என்று இன்னமும் கேட்பதன் அரசியல் என்ன?
இலுப்பம் பழம் பழுத்தால் வெளவால் வரும் என்று முன்பு சொன்னார்கள். வந்தது வெளவால் அல்ல, இந்தியா என்ற குள்ள நரி என்று கண்டோம். மீண்டும் அந்த குள்ளநரியை ஏன் நம்பி அழைக்கிறார்கள்?
தமிழ்மக்கள் உரிமை பெறுவதற்கு இந்தியா ஒருபோதும் உதவாது என்பதை இவர்கள் எப்போது உணரப் போகிறார்கள்?
உரிமை என்பது யார் மூலமாவது பெறும் பிச்சை அல்ல. அது போராடிப் பெற வேண்டியது. போராடுவதற்கு வக்கற்றவர்கள் எதற்கு பதவியில் குந்தியிருக்க வேண்டும்?
சிலர் இந்தியாவை நம்புங்கள் என்கிறார்கள்
இன்னும் சிலர் அமெரிக்காவை நம்புங்கள் என்கிறார்கள்
வேறு சிலர் ஜ.நா வை நம்புங்கள் என்கிறார்கள்.
ஆனால் இவர்கள் யாருமே தமிழ் மக்களை ஏன் நம்புவதில்லை?
சொந்த மக்களை திரட்டி போராடுவதற்கு ஏன் முனைவதில்லை?
இந்தியாவுக்கு சென்று அமைச்சர்களுடன் பேசுகிறார்கள்
அமெரிக்கா சென்று அமைச்சர்களுடன் பேசுகிறார்கள்
ஜ.நா சென்று அதிகாரிகளுடன் பேசுகிறார்கள்.
ஆனால் ஒரே நாட்டில் இருக்கும் சிங்கள மக்களிடம் சென்று பேச ஏன் மறுக்கிறார்கள்?
இவர்கள் நினைப்பதுபோல் ஒருவேளை இந்தியா நினைத்தாலோ அல்லது அமெரிக்கா நினைத்தாலோ சிங்கள மக்களின் ஆதரவு இன்றி எந்தவொரு தீர்வையும் கொண்டு வந்துவிட முடியுமா?
தயவு செய்து இனியும் மக்களை ஏமாற்ற முயலாதீர்கள்.
இந்திய அம்புலிமாமா கதைகளை நிறுத்துங்கள்
கண் திறந்து பாருங்கள், முழு நாடும் இந்திய ஆக்கிரமிப்பில்; உள்ளது
இனியாவது மக்களை திரட்டி போராட முனையுங்கள்
இல்லையேல் பதவிகளை துறந்துவிட்டு வீட்டுக்குச் சென்று சாய்மனைக் கதிரையில் நன்றாக ஒய்வெடுங்கள்.
ஆனால் சொந்த மக்களுக்கும் தாய் நாட்டிற்கும் துரோகம் இழைக்காதீர்கள்.

No comments:

Post a Comment