Tuesday, March 22, 2016

•இளங்கோவன் அவர்களே! எப்போது தீக்குளிக்க போகிறீர்கள்? பெற்றோல் செலவை அனுப்பி வைக்கட்டுமா?

•இளங்கோவன் அவர்களே!
எப்போது தீக்குளிக்க போகிறீர்கள்?
பெற்றோல் செலவை அனுப்பி வைக்கட்டுமா?
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்தால் தான் தீக்குளிக்க போவதாக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மிரட்டியதாக செய்திகள் வருகின்றன.
இளங்கோவன் முன்னரும் தான் ஆயுதம் தூக்குவேன், தீவிரவாதியாக மாறுவேன் என்றெல்லாம் கூறியிருக்கிறார். ஆனால் கூறியபடி எதுவுமே இதுவரை செய்யவில்லை.
ஆனால் இம்முறை அவர் கூறியபடி தீக்குளிக்க வேண்டும் என விரும்புகிறோம். அதற்குரிய பெற்றேல் செலவை அனுப்பி உதவ தயாராய் இருக்கிறோம்.
நடிகர் சஞசய்தத் விடுதலையை ஆதரித்த காங்கிரஸ் பேரறிவாளன் விடுதலையை எதிர்ப்பது ஏன்?
இந்த ஏழு பேரையும் உடன் விடுதலை செய்ய வேண்டும் என கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார்.
கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் விடுதலை செய்யக்கூடாது என்கிறார்.
அப்படியென்றால் காங்கிரஸ் கூட்டணியை கலைஞர் கருணாநிதி முறித்துக்கொள்வாரா? அல்லது காங்கிரசுடன் சேர்ந்து தமிழினத்திற்கு துரோகம் செய்யப்போகிறாரா?

No comments:

Post a Comment