Thursday, March 31, 2016

•பசு மாட்டிற்காக குரல் கொடுக்கும் இந்திய அரசு அகதிகளை சிறப்புமுகாமில் அடைப்பது ஏன்?

•பசு மாட்டிற்காக குரல் கொடுக்கும் இந்திய அரசு
அகதிகளை சிறப்புமுகாமில் அடைப்பது ஏன்?
அகதிகளைவிட பசுமாடுகள் மதிப்பு மிக்கவையா?
செய்தி- திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 15 அப்பாவி அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி காலவரையற்ற உண்ணாவிரதம்.
திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி ஈழ தமிழ் அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி 28.03.2016 முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
பசுமாட்டை சித்திரவதை செய்யக்கூடாது என்று குரல் கொடுக்கும் இந்திய அரசு அப்பாவி அகதிகளை சிறப்புமுகாமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறது.
இந்த அப்பாவி அகதிகளை விடுதலை செய்ய மறுக்கும் இந்திய அரசு "இந்து தமிழீழம்" அமைக்க உதவும் என்று எப்படி நம்புவது?
"இந்து தமிழீழம்" அமைக்க உதவும் படி கோரும் கவிஞர் காசி அனந்தன் அய்யா இந்த அப்பாவி அகதிகளை விடுதலை செய்யும்படி ஏன் இந்திய அரசிடம் கோருவதில்லை?
தனது மருத்துவ சிகிச்சைக்கு டில்லி வரும் சம்பந்தர் அய்யா இந்த அப்பாவி அகதிகளை விடுதலை செய்யும்படி ஏன் இந்திய அரசிடம்; கோர மறுக்கிறார்?
தனது குடும்பத்துடன் சென்னையில் சந்தோசமாக வாழ்ந்துவரும் மாவை சேனாதிராசா அவர்கள் இந்த அப்பாவி அகதிகள் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழ ஏன் உதவ மறுக்கிறார்?
கனடாவில் வாழும் தன் மகள் டில்லி மருத்துவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற அனுமதி வாங்கிய சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்த அப்பாவி அகதிகளின் விடுதலைக்காக தன் செல்வாக்கை ஏன் பயன்படுத்த தயங்கிறார்?
"டெலோ" தலைவர் செல்வம் அடைக்கலநாதன் புதுக்கோட்டை சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டவர்;. சிறப்புமுகாம் கொடுமைகளை அனுபவித்தவர். அவர்கூட இந்த அப்பாவி அகதிகளின் விடுதலைக்கு குரல் கொடுக்க மறந்து வருவது ஏன்?
ஈழத் தமிழருக்காக 27 கோடி ரூபா செலவு செய்து திருக்கேதீஸ்வரம் கோயிலை கட்டும் இந்திய அரசு அப்பாவி ஈழ அகதிகளை சிறப்புமுகாமில் அடைத்து சித்திரவதை செய்வது ஏன்?
தமிழர்கள் எல்லாம் இந்தி மொழி படிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கிய யாழப்;பாண இந்திய தூதர் இந்த அப்பாவி அகதிகள் விடுதலைபெற ஆலோசனை கூற மறுப்பது ஏன்?
ஜெயா அம்மையார் ஊழல் செய்து நீதிமன்றத்தினால் சிறை தண்டனை வழங்கிய போது அவரை விடுதலை செய்யுமாறு குரல் கொடுத்த நாடுகடந்த தமிழீழத்தின் பிரதமா உருத்திரகுமார் அவர்கள்; இந்த அப்பாவி அகதிகளை விடுதலை செய்யுமாறு ஜெயா அம்மையாரிடம் கேட்க மறுப்பது ஏன்?
இந்திய தூதுவரிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர் கொடுத்த உதவி பற்றிய அறிக்கைகளை வெளியிடும் எமது தமிழ் ஊடகங்கள் இந்த அப்பாவி அகதிகளின் உண்ணாவிரத செய்திகளை வெளியிடாமல் மறைத்து வருவது ஏன்?
தமிழக அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் "நாம்தமிழா"; சீமான் அவர்கள் மட்டுமே தாம் ஆட்சிக்கு வந்தால் சிறப்புமுகாம்களை மூடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்புமுகாமிற்கு எதிராக குரல் கொடுத்து வந்த வைகோ, திருமாவளவன் போன்றவர்கள்கூட தமது தேர்தல் அறிக்கையில் சிறப்புமுகாம் பற்றி குறிப்பிடாதது வருந்தக்க விடயமே.
இந்தியாவில்,
ஈழ தமிழ் அகதிகள் கேட்பதற்கு யாருமற்ற அனாதைகள் மட்டுமல்ல
அவர்கள் அங்கு பசுமாட்டைவிடக் கேவலமானவர்களும்கூட.

No comments:

Post a Comment