Tuesday, March 22, 2016

•ஞாயம்மாரே! எங்களுக்கு ஒரு நியாயம் சொல்லுங்கள்!

•ஞாயம்மாரே!
எங்களுக்கு ஒரு நியாயம் சொல்லுங்கள்!
பிரதமர் மோடி அவர்களே!
பசுவை வதைக்கக்கூடாது என்று சட்டம் உள்ள நாட்டில் அகதியை வதைக்கலாமா? ஈழ அகதி பசுவைவிடக் கேவலமானவா?
ஜெயா அம்மையார் அவர்களே!
சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்களையும் திறந்த வெளிச் சிறைச்சாலை என்னும் சாதாரண முகாம்களையும் நடத்தும் உங்களுக்கு இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தார்மீக தகுதி இருக்கா?
கலைஞர் அவர்களே!
தமிழ் நாட்டில, தமிழக அரசின் தமிழ் அதிகாரியினால், ஒரு தமிழ் அகதி கொல்லப்பட்டிருக்கிறான். இந்த நிலையில் "உலக தமிழின தலைவர்" என்று உங்களை அழைத்துக்கொள்ள கேவலமாக தெரியவில்லையா?
(ஓட்டுப்பொறுக்கி) கம்யுனிஸ்டுகளே!
கன்னையாகுமாரை அழைத்து வந்து தேர்தல் கூட்டத்தில் எப்படி பேசவைக்கலாம் என்று நினைக்கும் நீங்கள,; உங்கள் அருகில் ஒரு அகதி செத்திருப்பது தெரியவில்லையா? ஈழ அகதி மனிதன் இல்லை என்றோ அல்லது அவனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கக்கூடாது என்றோ கால்மாக்ஸ் எங்கேயாவது மூலதனத்தில் சொல்லியிருக்கிறாரா?
இந்து முன்னனியினரே,
எங்கேயோ பிறந்த இயேசுவை ஒரு இந்து என்று கண்டு பிடித்த உங்களால,; உங்கள் முன்னால் இறந்த ஈழ தமிழ் அகதியும் ஒரு இந்துதான் என்பதை ஏன் தெரிந்துகொள்ள முடியாமற் போனது?
தமிழக மக்களே!
ஆசியாக் கோப்பையை இந்தியா கைப்பற்றிய வெற்றிக் களிப்பில்
ஒரு அகதி செத்திருப்பதை கண்டுகொள்ள தவறிவிட்டிர்களே?
இன்னும் எத்தனை அகதி இறந்த பின்பு அல்லது
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு
அகதிகள் குறித்து அக்கறை கொள்ளப் போகிறீர்கள்?
ஈழ அகதி கனடாவில் எம்.பி யாகலாம்
ஈழ அகதி நோர்வேயில் மேயராகலாம்
ஈழ அகதி லண்டனில் கவுன்சிலராகலாம்
ஆனால் ஈழ அகதி தமிழ்நாட்டில் சுதந்திரமாக நடமாட முடியவில்லையே?
ஏன் இந்த அவல நிலை?
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் காளை மாட்டை வதைக்கக்கூடாது என்று தடைபோடும் உச்ச நீதிமன்றம் 35 ஆண்டுகளாக ஈழ அகதிகள் வதைபடுவதை கண்டு கொள்ளாதது ஏன்?
ஈழ அகதிகளைவிட காளை மாடுகள் உயர்ந்தவையா?
இந்தியாவில்,
தீபெத் அகதி சுதந்திரமாக நடமாட முடியும்
பர்மா அகதி சுதந்திரமாக நடமாட முடியும்
பங்களாதேஸ் அகதிகூட சுதந்திரமாக நடமாட முடியும்
ஆனால் வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில்
ஈழ அகதிகள் மட்டும் ஏன் சுதந்திரமாக நடமாட முடியாது?
பாக்கிஸ்தான் பாடகருக்கு குடியுரிமை வழங்கும் இந்திய அரசு, ஈழ தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்காதது மட்டுமன்றி அவர்களை சிறப்புமுகாம்களில் அடைத்து சித்திரவதை செய்வது ஏன்?

No comments:

Post a Comment