Tuesday, March 22, 2016

நகைமுகன் அவர்களுக்கு அஞ்சலிகள்!

•நகைமுகன் அவர்களுக்கு அஞ்சலிகள்!
தனித் தமிழர் சேனையின் தலைவர் நகைமுகன் அவர்கள் தனது 66 வயதில் சுகயீனம் காரணமாக மதுரையில் காலமானார்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நகைமுகன் அவர்களுக்க எமது அஞ்சலிகளை செலுத்துகிறோம்.
இவர் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் புலிகள் இயக்கத்தை ஆதரித்தார் என்ற குற்றச்சாட்டில் தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜெயா ஆம்மையாரின் ஆட்சிக்காலத்தில் ஈழத் தமிழர்களை ஆதரிப்போர் "தடா" சிறையில் அடைக்கப்பட்டவேளை இவர் தைரியமாக தனது ஆதரவை ஈழத் தமிழர்களுக்கு வழங்கினார்.
இவருடைய முயற்சியின் பயனாகவே சிவசேனை தலைவர் பால்தக்ரே அவர்கள் விடுதலைப் புலிகளையும் ஈழத் தமிழர்களையும் ஆதரித்தார் என்று அறிந்திருக்கிறேன்.
நான் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தவேளை எனக்காக ஜனாதிபதி ,பிரதமர், உச்ச மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் என பலருக்கும் மனு அனுப்பி நியாயம் வழங்குமாறு வலியுறுத்தினார்.
எனது வழக்கில் நான் நிரபராதி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் என்னை விடுதலை செய்யாது தொடர்ந்தும் சிறப்புமுகாமில் அரசு அடைத்தபோது எனக்கு ஆறுதல் கூறி கடிதம் எழுதியதுடன் எனது விடுதலைக்காக தொடர்ந்து பாடுபட்டார்.
எனக்காக மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து தன் ஆதரவை உறுதியாக வழங்கியவர். அவரை என்றும் நினைவில் கொள்வோம்.
அவருக்கு எமது அஞ்சலிகளை செலுத்துகிறோம். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தவர்கள் மற்றும் கட்சியினருக்கு எமது அனுதாபங்களைத் தெரிவித்தக்கொள்கிறோம

No comments:

Post a Comment