Thursday, March 31, 2016

•கனடா பிரதமரும் தமிழக முதல்வரும்

•கனடா பிரதமரும் தமிழக முதல்வரும்
மக்கள் தலைவர்கள் என்றால் அதிக பாதுகாப்பு எதற்கு?
மக்கள் வரிப் பணம் இப்படி வீணாக அனுமதிக்கலாமா?
உலகின் இரண்டவது பெரிய நாடான கனடா நாட்டின் பிரதமர் சர்வ சாதாரணமாக வீதியில் திரிகிறார்.
அவர் தனது குடும்பத்துடன் எந்தவித பாதுகாப்பு பந்தோபஸ்தும் இன்றி; அமெரிக்காவிலும் நடமாடினார்.
ஆனால் ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் இந்தியாவில் பிரதமர் மோடி அவர்கள் கறுப்பு பூனை பாதுகாப்பு இன்றி வெளியே வருவதில்லை.
இதில் கொடுமை என்னவென்றால் பிரதமர் மோடி அண்மையில் கோயம்புத்தூர் வந்தபோது பாதுகாப்பு கருதி கன்னியாகுமரி முகாமில் இருந்த அகதிகள்கூட வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
ஈழ அகதிகளை இப்படி கொலைக் குற்றவாளிகள் போல் கருதி முகாமிற்குள் அடைத்து வைப்பது கேவலம் இல்லையா?
இந்திய பிரதமர் நிலை இதுவென்றால் அதைவிட மோசமான நிலை தமிழக முதல்வருடையது. அவரை அம்மா என்று அழைக்கிறார்கள். ஆனால் அவர் கறுப்பு பூனை பாதுகாப்பு இன்றி வெளியே வருவதில்லை.
ஜெயா அம்மையாரை மக்கள் மட்டுமல்ல அவருடைய மந்திரிகள்கூட சந்திக்க முடியாத நிலை. அண்மையில் மத்திய அமைச்சர் ஒருவர் தான் எவ்வளவோ முயன்றும் ஜெயா அம்மையாரை சந்திக்க முடியாமல் உள்ளது என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
ஜெயா அம்மையாரைப் பொறுத்தவரையில் அவர் தற்போது தமிழக முதல்வர். எனவே அவரது பாதுகாப்பை ஓரளவு நியாயப்படுத்திக்கொண்டாலும் கலைஞர் கருணாநிதிக்கு எதற்கு கறுப்புபூனை பாதகாப்பு வழங்கப்படுகிறது என்று புரியவில்லை.
அவர் தற்போது எதிர்க்கட்சி தலைவரும் இல்லை. ஒரு சாதாரண எம்.எல்.ஏ. அதுவும் சட்டசபைக்கு செல்வதில்லை. அவருக்கு எதற்கு இத்தனை செலவில் பாதுகாப்பு?
"உலக தமிழின தலைவர்" என்பவர்; தமிழ்நாட்டில் பாதுகாப்பு இன்றி நடமாட முடியவில்லை என்பது அவருக்கு மட்டுமல்ல தமிழினத்திற்கே கேவலம் இல்லையா?
இவர்கள் இருவருக்கும் புலிகளால் ஆபத்து என்றே இந்த பாதுகாப்பு வழங்கப்ட்டு வருகிறது. தற்போது புலிகள் இல்லைத்தானே. அப்பறம் ஏன் இன்னும் இவர்கள் பாதகாப்பு விலக்கிக்கொள்ளப்படவில்லை?
ஒருபறம் முதலாளி மல்லையாக்கள் கோடிகக்கணக்கான பணத்தை ஏமாற்றிக்கொண்டு வெளிநாடு ஓடித் தப்புகிறார்கள்.
இன்னொருபுறம் அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் ஊழல்; செய்வது மட்டுமன்றி பாதுகாப்பு என்னும் பெயரில் மக்கள் பணத்தை வீணாக்குகின்றனர்.
இவர்களுக்காக அப்பாவி மக்கள் பாரிய கடன் சுமையை தங்கள் தலையில் சுமக்கின்றனர். இந்த அவல நிலைக்கு ஒரு முடிவு ஏற்படாதா?

No comments:

Post a Comment