Tuesday, March 22, 2016

•சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்!

•சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்!
"தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா. தாழ்த்தப்பட்டவர்களின் சிறைக்கூடமே சேரிகள்."- தோழர் தமிழரசன்.
உயர் சாதிப் பெண்ணை காதலித்து திருமணம் செய்தமைக்காக தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.
இத்தகைய கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த கௌரவக் கொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில்,
வன்னியர் இருக்கிறார்கள்
தேவர் இருக்கிறார்கள்
கவுண்டர்கள் இருக்கிறார்கள்
நாடார்கள் இருக்கிறார்கள்
ஆனால் தமிழர்கள் இருக்கிறார்களா?
தமிழர்கள் இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்திருக்குமா?
கைக்கு எட்டிய தூரத்தில் தன் இனம் அழிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்தக்கொண்டு இருந்திருக்குமா?
தமிழக மண்ணிலேயே தமிழ் அதிகாரியின் தொல்லை தாங்காமல் ஈழ தமிழ் அகதி தற்கொலை செய்வதை அனுமதிக்குமா?
தமிழ்நாட்டை நம்பி வந்த தமிழ் அகதி தமிழ்நாடு அரசால் சிறப்புமுகாமில் அடைக்கப்படுவதை வேடிக்கை பார்க்குமா?
தமிழனுக்கு தமிழ் இன உணர்வு இல்லாததால்தானே இத்தனை அவலமும் நடக்கிறது!
தமிழ்நாட்டில் தமிழர்கள் இன உணர்வு அற்று சாதி ரீதியாக பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
எனவே தமிழ் இனம் விடுதலை பெறவேண்டுமாயின் அதற்கு சாதி விடுதலை பெறுவது முக்கிய நிபந்தனையாகும்.
இதனை நன்கு உணர்ந்த தோழர் தமிழரசன் சாதீய விடுதலைக்காக மீசுருட்டி அறிக்கையை முன்வைத்துள்ளார்.
அவர் காட்டிய வழியில் போராட்டத்தை முன்னெடுப்பதே தமிழ் தேசிய விடுதலையை மட்டுமல்ல சாதிய விடுதலையும் பெற்று கொடுக்கும்.

No comments:

Post a Comment