Tuesday, March 22, 2016

•வருவாய்துறை அதிகாரியின் தொல்லை பொறுக்காமல் ஈழ அகதி தற்கொலை

•வருவாய்துறை அதிகாரியின் தொல்லை பொறுக்காமல் ஈழ அகதி தற்கொலை
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு ஈழ அகதிகளை மட்டும் தற்கொலை செய்ய வைக்கிறது.
தமிழ்நாட்டில் ,
"ஈழத் தாய்" ஜெயா அம்மையார் ஆட்சியில் அதிகாரியின் தொல்லை பொறுக்க முடியாமல் ஈழ அகதி தற்கொலை.
"உலக தமிழின தலைவர்" கருணாநிதி இருக்கும் தமிழ்நாட்டில் வாழ முடியாமல் ஈழ அகதி தற்கொலை
ஈழத் தமிழர்களுக்காக குரல்; கொடுக்கும் வைகோ, ராமதாஸ், திருமா, சீமான் எல்லோரும் இருந்தும் அதிகாரியின் தொல்லை பொறுக்காமல் ஈழ அகதி தற்கொலை
ஒருபுறம் தற்கொலை செய்ய வைக்கிறார்கள். மறுபுறம் சிறப்புமுகாமில் அடைத்து சித்திரவதை செய்கிறார்கள்.
அகதிகளின் இந்த துயரத்திற்கு முடிவு எப்போது?
லண்டன், கனடா , நோர்வே போன்ற நாடுகளில் ஜெயா அம்மையார் இல்லை. அங்கு கலைஞர் வகையறாக்ளும் இல்லை. ஆனால் அந்த நாடுகளில் அகதிகள் 7 வருடத்தில் குடியுரிமை பெறுகிறார்கள். உயர் கல்வி பெறுகிறார்கள். ஏன் எம.பி யாக மேயராக , அமைச்சராக கூட வருகிறார்கள்.
ஆனால் இந்தியாவில் 7 கோடி தமிழர் இருந்தும் அகதிகள் நிம்மதியாக வாழ முடியவில்லை..ஏன் இந்த அவலம்?
இந்தியாவில்
தீபெத் அகதி வாழ முடியும்,
வங்காள அகதி வாழ முடியும்.
பர்மிய அகதிகூட வாழ முடியும்
ஆனால் ஈழ தமிழ் அகதிகள் மட்டும் வாழ முடியவில்லை.
தமிழனுக்கு மட்டும் ஏன் இந்த அவலம்?
வந்தாரை வாழவைக்கும் தமிழகம்
ஈழ அகதிகளை மட்டும் சிறப்புமகாமில் அடைக்கிறது.
அல்லது தற்கொலை செய்ய வைக்கிறது.

No comments:

Post a Comment