Thursday, March 31, 2016

மக்கள் சேவையே மகேசன் சேவையா? அல்லது மகேசன் சேவையே மக்கள் சேவையா?

மக்கள் சேவையே மகேசன் சேவையா?
அல்லது
மகேசன் சேவையே மக்கள் சேவையா?
வறுமையின் கொடுமையினால் வன்னியில் தாய் தன் பிள்ளைகளை கிணற்றில் வீசிக் கொன்றது பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.
கிளிநொச்சியில் ஒரு சிறுவன் பரீட்சைக்கட்டணம் கட்ட காசு இன்றி திருடியது பற்றி இவர்களுக்கு கவலை இல்லை
ஒரு முன்னாள் பெண் போராளி வறுமையினால் இறந்தது மட்டுமல்ல தன் இறுதிசடங்கைகூட அரசு செலவில் நடத்தும்படி கேட்டது குறித்து இவர்களுக்கு கவலை இல்லை.
மதுரையில் ஒரு அகதி அதிகாரியின் தொல்லை பொறுக்காமல் தற்கொலை செய்ததும் இவர்களுக்க கவலை இல்லை.
ஆனால் இவர்களது அக்கறை எல்லாம் 27 கோடி ரூபா செலவில் திருக்கேதீஸ்வர ஆலைய திருத்த வேலைகள் மட்டுமே.
தனது கட்டிடத்தையே குண்டு வீச்சில் இருந்து காப்பாற்ற முடியாத கடவுளுக்கு எதற்கு 27 கோடி ரூபா செலவு செய்ய வேண்டும் என்று நான் இங்கு கேட்கப் போவதில்லை.
நான் இங்கு கேட்பதெல்லாம்
மக்கள் தங்க வீடு இல்லாத நிலையில் கடவுளுக்கு ஆலயம் கட்டும்படியும்
மக்கள் கல்வி கற்க பாடசாலை இல்லாதபோது கடவுளுக்கு கோயில் கட்டும்படியும்
சிறுவர்கள் பாலுக்குகூட வழியின்றி தாயினால் கொலை செய்யப்படும்போது கோடி ரூபா செலவு செய்து கடவுளுக்கு கட்டிடம் கட்டும்படியும்
எந்தக் கடவுள் கேட்டிருக்கிறார்?
எங்கு அப்படி கேட்டிருக்கிறார்?
சம்பூர் மக்கள் இன்னமும் அகதி முகாமில் இருக்கிறார்கள். ஆனால் அதுபற்றிக் கவலையின்றி "வாழ்நாள்வீரர்" சம்பந்தர் அய்யா அங்கு பல லட்சம் ரூபா செலவு செய்து காளி கோயில் கட்டுகிறார்.
வன்னியில் மக்கள் பட்டினியால் வாடும்போது 27 கோடி ரூபா செலவில் அதுவும் இந்திய உதவியில் கோயில் கட்டுவது அவசியம்தானா?
வடமாகாண முதல்வர் விக்கி அய்யா இது குறித்து பதில் தருவாரா?
மக்களுக்கு செய்யும் சேவையே கடவுள் சேவையாகும் என்றே நான் அறிந்திருக்கிறேன்.
ஆனால் இவர்கள் மக்கள் வாடும்போது மக்களுக்கு சேவை செய்யாமல் கடவுளுக்கு சேவை செய்கிறார்களே?
தமிழ் இனத்திற்கு ஏன் இந்த அவலம்?

No comments:

Post a Comment