Sunday, May 28, 2023

பாலு மகேந்திரா “வீடு” என்று ஒரு படம்

பாலு மகேந்திரா “வீடு” என்று ஒரு படம் இயக்கியிருந்தார். அதற்காக போரூரில் உண்மையாகவே ஒரு வீடு கட்டி படமாக்கினார். இந்தப் படம் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் தலைமையிலான இயக்கத்தின் பணத்தில் தயாரிக்கப்பட்டது. ஒரு இயக்கத்தின் பணத்தில் இந்தப் படம் தயாராகிறது என்ற விபரம் பாலு மகேந்திராவுக்கு தெரிந்திருந்ததா என்று எனக்கு தெரியவில்லை. படம் முடியும்போது அந்த வீட்டை விற்று பணத்தை பாலு மகேந்திரா எடுத்துவிட்டார் என்றும் அந்த இயக்கத்திற்கு கொடுக்கப்படவில்லை என பரவலாக பேச்சு அடிபட்டது. பின்னர் பாலு மகேந்திரா இறந்தபோது நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் சீமான் பேசும்போது ஒரு விடயத்தை கூறினார். மட்டக்களப்பில் காசிஆனந்தன் சயிக்கிள் ஓட்டிச் சென்றதாகவும் பின்னால் இருந்து சென்ற பாலு மகேந்திரா பாடசாலை ஒன்றிற்கு குண்டு எறிந்ததாகவும் கூறியிருந்தார். இந்த செய்தி எனக்கு புதிதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அதனால் எந்த பாடசாலைக்கு எத்தனையாம் ஆண்டு இந்த குண்டு எறியப்பட்டது என முகநூலில் கேட்டேன். அதற்கு சீமானுடன் கூட இருக்கும் பாக்கியராசன் என்பவர் பதில் தந்தார். அந்த செய்தி காசி ஆனந்தன் கூறியிருந்ததாகவும் அதையே சீமான் கூட்டத்தில் பேசினார் என்றார். பாலு மகேந்திரா சிறந்த ஒளிப்பாதிவாளர்தான். அதில் சந்தேகம் இல்லை. பாலா, வெற்றிமாறன் எல்லாம் அவருடைய பட்டறையில் இருந்து வந்தவர்கள்தான். ஆனால் அவருக்கு இப்படிப்பட்ட அரசியல் சாயம் தேவையற்றது. குறிப்பு - இன்று (20.05.1939) பாலு மகேந்திராவின் பிறந்த தினம் ஆகும்.

No comments:

Post a Comment