Sunday, May 28, 2023

நாய்க்கு கல் எறிந்தால் நாய் ஓடும்

நாய்க்கு கல் எறிந்தால் நாய் ஓடும். ஆனால் அதே கல்லை தேன்கூட்டிற்கு எறிந்தால் நாம் ஓட வேண்டி வரும். தேனியை விட நாய் பலமானது. ஆனாலும் தேனி அனைத்தும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து விரட்டுவதால் நாம் ஓட வேண்டியிருக்கிறது. காட்டில் சிங்கம் ராஜாதான். ஆனால் எருமைகள் ஒற்றுமையாக ஒன்று திரண்டால் சிங்கம் ஓட வேண்டி வரும். அதேபோல தமிழ் இனம் ஒற்றுமையாக ஒன்று திரண்டால் தமிழின எதிரிகள் அனைவரும் ஓட்டம் எடுப்பர். ஒன்று சேர்வோம். ஒருமித்து குரல் கொடுப்போம்.

No comments:

Post a Comment