Sunday, May 28, 2023

இந்தியாவின் சனத்தொகையில்

இந்தியாவின் சனத்தொகையில் ஹிந்தி பேசும் மக்கள் வெறும் 35% மட்டுமே. ஆனால் அங்கு அவர்கள் மற்ற சிறுபான்மை இனங்கள் மீது கலவரங்கள் நடத்துவதில்லை. இலங்கையின் சனத்தொகையில் சிங்களவர்கள் 80 % ஆகும். ஆனாலும் அவர்கள் தொடர்ச்சியாக சிறுபான்மை இன மக்கள் மீது தாக்குதல்கள் நடத்துகிறார்கள். இது ஏனெனில் இந்தியாவில் இந்தி பேசும் மக்கள் தங்களை பெரும்பான்மையினமாக உணர்கிறார்கள். ஆனால் இலங்கையில் சிங்களவர்கள் தங்களை பெரும்பான்மையினராக உணர்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் இலங்கைக்கு அருகில் இந்தியாவில் எட்டுக்கோடி தமிழர் இருப்பதும் வரலாற்றில் பல தடவைகள் அங்கிருந்து படை எடுப்புகள் நடந்ததுமே. மகிந்த ராஜபக்சா இனப் படுகொலை செய்வதற்கு இந்திய அரசு பங்களிப்பு வழங்கியதோடு இன்றும் இலங்கை அரசை காப்பாற்றி உதவி வருகிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றதால்தான் இந்திய அரசு இவ்வாறு தமிழ் மக்களை பழி வாங்குகிறது என்று சிலர் கூறுகின்றனர். அது தவறு. ராஜீவ் காந்தியைக் கொல்லாவிட்டாலும் இந்திய அரசு தமிழீழம் அமைய உதவியிருக்கப்போவதில்லை என்பதே உண்மை. ஏனெனில், தமிழீழம் அமைவதை தாம் விரும்பவில்லை என்றும் அதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் 1983 முதலே இந்திய அரசு தெளிவாகவும் உறுதியாகவும் கூறிவருகிறது. தமிழீழம் அமைந்தால் அது தமிழ்நாடு தனிநாடாவதற்கு உந்து சக்தியாக அமைந்துவிடும் என இந்திய அரசு அஞ்சுகிறது. தமிழ்நாடு தனி நாடானால் இந்தியா சுக்கு நூறாக உடைந்துவிடும் என இந்திய அரசு கருதுகிறது. அதைவிட முக்கியமான விடயம் புலிகள் இருக்கும்வரை இந்திய அரசால் தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யவோ தமிழர்களின் வளங்களை சுரண்டவோ முடியவில்லை. 2009ல் புலிகள் அழிக்கப்பட்டவுடன் தமிழர் பகுதிகள் யாவும் இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டது. புலிகளை அழித்தாயிற்று. புலிகளின் பெயரால் ஆயிரக் கணக்கில் தமிழ் மக்களை அழித்தாயிற்று. தமிழர் வளங்களை ஆக்கிரமித்தாயிற்று. ஆனாலும் இந்தியா தன் நாச வேலைகளை நிறுத்தவில்லையே! ஆனால் பிரச்சனை என்னவெனில் சம்பூரில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் மற்றும் வேடுவர் அனைவரும் ஒன்று சேர்ந்து விரட்டியதுபோன்றுவடக்கு கிழக்கு முழுவதும் மக்கள் ஒன்றுபட்டு தம்மை விரட்டிவிடுவார்களோ என்று இந்திய அரசு அஞ்சுகிறது. அதனால்தான் தமிழ் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த சாதி, மத மோதல்களை இந்திய தூதரும் உளவுப்படையும் உருவாக்குகின்றனர். இங்கு வேதனை என்னவென்றால் இந்த உண்மைகளை புரிந்துகொள்ளாமல் எம்மவர் சிலர் இந்திய அரசின் விசுவாசிகளாக செயற்படுகின்றனர். எந்த இந்திய அரசு இனப்படுகொலையின் பங்காளியாக இருக்கிறதோ அதே இந்திய அரசு இனப்படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும் எனக் கோருகின்றனர். எந்த இந்திய அரசு தமிழ் மக்களை நசுக்கிறதோ அதே இந்திய அரசு தமிழ் மக்களுக்க தீர்வு பெற்று தரும் என நம்புகின்றனர்.

No comments:

Post a Comment