Sunday, May 28, 2023

தாணுவுடன் ஒரு கற்பனை உரையாடல்

தாணுவுடன் ஒரு கற்பனை உரையாடல் என்னும் தலைப்பில் நான் எழுதிய பதிவை ஒவ்வொரு வருடமும் மே மாதம் 21ம் திகதி மீள் பதிவாக முகநூலில் பல வருடங்களாக பதிவு செய்து வருகிறேன். (அப் பதிவு கீழே பின்னூட்டத்தில் தந்துள்ளேன். இதுவரை படிக்காதவர்கள் படிக்கலாம்.) 2018ம் ஆண்டு மீள்பதிவு செய்யப்பட்ட எனது அந்தப் பதிவையும் புலிகள் அமைப்பை தடை செய்வதற்கு ஒரு காரணியாக இந்திய அரசு காட்டியுள்ளது என்ற விபரம் எனக்கு அண்மையில்தான் தெரிந்தது. அது ஒரு கற்பனை உரையாடல். அது மட்டுமல்ல அதில் தாணுவை புலி என்றோ அல்லது புலிகள்தான் ராஜீவைக் கொன்றனர் என்றோ நான் எதுவும் கூறவில்லை. இருந்தும் ஒரு முகநூல் பதிவை அதுவும் கற்பனை உரையாடல் பதிவை ஒரு காரணியாக இந்திய அரசு சுட்டிக்காட்டியிருப்பது ஆச்சரியமாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது. நான் மிகவும் சாதாரண ஒரு மனிதன். எனது முகநூல் பதிவுகளை கவனத்தில் எடுத்து ஏன் இந்திய அரசு எரிச்சல் அடைகிறது? ஏனெனில் நான் சொல்லும் கருத்துகள் உண்மை என்பது மட்டுமன்றி அது பல்லாயிரம் பேரை சென்றும் அடைகிறது. வெடி குண்டு ஒருமுறைதான் வெடிக்கும். கருத்துகள் பற்றிக்கொள்ளும்போதெல்லாம் வெடிக்கும். அதனால்தான் இந்திய அரசு அச்சமடைகிறது போலும்.

No comments:

Post a Comment