Sunday, May 28, 2023

கார்பெட் றோட் போட்டுக்கொடுத்தால்

கார்பெட் றோட் போட்டுக்கொடுத்தால் இனப்படுகொலையை தமிழ் மக்கள் மறந்துவிடுவார்கள் என மகிந்த அரசு நினைத்தது. ஐம்பதாயிரம் வீடு கட்டித் தருவதாக கூறினால் இனப்படுகொலையை தமிழ் மக்கள் மறந்துவிடுவார்கள் என இந்திய அரசு நினைத்தது. நாலு புலமைச்சீட்டு வழங்கினால் இனப்படுகொலையை தமிழ் மாணவர்கள் மறந்துவிடுவர் என யாழ் இந்திய தூதர் நினைத்தார். ஆனால் மக்கள் மட்டுமன்றி யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் தாம் இனப்படுகொலையை மறக்க மாட்டோம். அதற்குரிய நீதியை பெறாமல் ஓயமாட்டோம் என்பதை காட்டியுள்ளார்கள். அரசியல் தலைவர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் மக்களை ஒருபோதும் வாங்க முடியாது என்பதை இனியாவது சிங்கள இந்திய அரசுகள் புரிந்து கொள்ளட்டும்.

No comments:

Post a Comment