Sunday, May 28, 2023

எமக்கு தேவை

எமக்கு தேவை "அடுத்த வருடம் தீர்வு வரும்" என்று ஏமாற்றும் தலைவர் அல்ல, எமக்கு தேவை "இந்தியாவின் உதவியுடன் தீர்வு வரும்" என்று கூறும் தலைவர் அல்ல. எமக்கு தேவை "அடிமையாக கிடக்கிறாய். எழுந்து நின்று போராடு" என்று கூறும் ஒரு "சே " எமக்கு என்று ஒரு தொன்மையான மொழி உண்டு, எமக்கு என்று ஒரு கலை கலாச்சாரம் உண்டு, எமக்கு என்று நாம் செறிந்து வாழும் ஒரு நிலப் பரப்பு உண்டு, எமக் கென்று பொருளாதார வளமும் கூட உண்டு, இருந்தும் எம்மை நாமே தீர்மானிக்கும் ஆட்சி எம்மிடம் இல்லை ஏனெனில் நாம் அடிமையாக வீழ்ந்து கிடக்கிறோம். போர்த்துக்கேயரை எதிர்த்து போராடிய நாம், ஒல்லாந்தரை எதிர்த்து போராடிய நாம், ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய நாம், இன்று ஏன் போராடாமல் வீழ்ந்து கிடக்கிறோம்? ஏனெனில் நாம் “அடிமை” என்பதை உணராமல் இருக்கிறோம். ஒன்றரைக்கோடி சிங்களவர்களுக்குகூட ஒரு அரசு இருக்கிறது. ஆனால் எட்டுக்கோடி தமிழருக்கு ஒரு அரசு இல்லையே? தமிழருக்கு என்று ஒரு அரசு இருந்திருந்திருந்தால் ஒன்றரை லட்சம் தமிழரை இனப்படுகொலை செய்திருக்க முடியுமா? ஏன் என்று கேட்க நாதியற்ற இனமாக இருக்கிறோமே? இந்த அவல நிலை நீங்கிடுவது எப்போது?

No comments:

Post a Comment