Sunday, May 28, 2023

யார் இந்த மணி?

•யார் இந்த மணி? இது கௌத்தூர் மணி பற்றியோ அல்லது வீரமணி பற்றிய பதிவோ இல்லை. இது கலைஞர் தத்து எடுத்த அகதிச் சிறுவன் மணி பற்றியது. நான் இப்போது மட்டுமல்ல கலைஞர் உயிருடன் இருந்தபோதே பல தடவைகள் இந்த அகதிச் சிறுவன் மணி எங்கே என்று கேட்டுள்ளேன். தமிழக அரசியல் தலைவர்களில் பரிதிஇளம்வரிதி மட்டுமே “இந்த அகதிச் சிறுவன் எங்கே?” என்று ஒருமுறை கேட்டு அறிக்கை விட்டிருந்தார். பரிதிஇளம்வரிதி திமுக வில் இருந்தவர். அதுவும் ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்தவர். எனவே அவர் திமுக வை விட்டு வெளியேறியதும் இதைக் கேட்கிறார் எனில் நிச்சயம் அச் சிறுவனுக்கு ஏதோ விபரீதம் ஸ்டாலினால் நடந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். ஊடகவியலாளர் சோமு அவர்கள் பரிதி இளம்வரிதியின் கைத்தொலைபேசி இலக்கத்தை எனக்கு தந்து உதவினார். நான் உடனே பரிதிஇளம்வரிதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அகதிச் சிறுவனுக்கு என்ன நடந்தது என்று கேட்டேன். அதற்கு அவர் “அது முடிந்துபோன விடயம். இனி அதைப் பேசி என்ன பயன்?” என்று கேட்டார். தமிழக அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரையில் அது யாரோ ஒரு அகதிச் சிறுவன் பற்றிய விடயம். ஆனால் எமக்கு அது இன்னொரு ஈழத் தமிழன் பற்றிய விடயம். அதனால்தான் எமக்கு வலிக்கிறது. சரி. நடந்தது என்ன? 1983ல் இலங்கையில் நடந்த இனக் கலவரத்தை அடுத்து ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் அகதிகள் தமிழகம் சென்றனர். அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் மலையாளி என்றும் அதனால் அவருக்கு ஈழத் தமிழர் மீது அக்கறை இல்லை என்றும் கலைஞர் குற்றம் சாட்டியிருந்தார். அப்போது அதை இன்னும் அழுத்தமாக பதிவு செய்வதற்காக ஒரு அகதிச் சிறுவனை தான் தத்து எடுப்பதாக கலைஞர் அறிவித்தார். அந்த அகதி சிறுவனுக்கு மணி என்று பெயர் சூட்டினார். அவரும் அந்த சிறவனும் சேர்ந்து இருக்கும் படங்கள் பத்திரிஜகைகளில் பிரசுரம் செய்யப்பட்டன. அதுமட்டுமல்ல, கனிமொழிக்கு தம்பி இல்லை என்ற குறை இருந்ததாகவும் இச் சிறுவனை தத்து எடுத்ததன் மூலம் அக் குறையும் தீர்ந்து விட்டதாக கலைஞர் கூறினார். சிறுவனை தத்து எடுத்து வளர்ப்பதாக கலைஞர் அறிவித்தபடியால் கலைஞரின் சொத்தில் சட்டப்படியான உரிமை அச் சிறுவனுக்கு வந்துவிடும் என்று அஞ்சிய ஸ்டாலின் அச் சிறுவனை விரட்டிவிட்டதாக பின்னர் செய்திகள் வந்தன. ஆனால் அச் சிறுவன் விரட்டப்படவில்லை, மாறாக கொல்லப்பட்டுவிட்டான் என்ற சந்தேகம் பரிதிஇளம்வரிதியின் பேட்டிகள் உறுதி செய்தன. எமக்கு வருத்தம் என்னவெனில் எம்.ஜி.ஆரைவிட தனக்கு தமிழ் இனப்பற்று அதிகமாக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக கலைஞர் ஒரு அகதிச் சிறுவனை அநியாமாக பலியிட்டு விட்டார் என்பதே. குறிப்பு – பரிதி இளம் வழுதியின் பேட்டி மற்றும் முதலமைச்சர் ஜெயலதாவிற்கு நான் அனுப்பிய மின்னஞ்சல் யாவும் கீழே பின்னூட்டத்தில் தந்துள்ளேன்.

No comments:

Post a Comment