Sunday, May 28, 2023

நாய்கள் தம் வாலைக் கடிப்பதில்லை

• நாய்கள் தம் வாலைக் கடிப்பதில்லை 40 வருடமாக இந்தியாவில் அகதியாக இருக்கும் ஈழத் தமிழ் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்காத இந்திய அரசு, எந்தவித வழக்கும் இன்றி பல வருடங்களாக சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் இந்துக்களை விடுதலை செய்யாத இந்திய அரசு, 2009ல் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்கள் இந்துக்கள் என்று கூறினால் தமிழீழம் பெற்றுத் தரும் என்கிறார்கள். முதலில் இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்றார்கள். இப்போது சிங்கள அரசால் கொல்லப்பட்டவர்கள் இந்துக்கள் என்றால் தமிழீழம் கிடைக்க இந்திய அரசு உதவும் என்கிறார்கள். வெடுக்குநாறி மலையில் பூஜை செய்தமைக்காக பூசகரை கைது செய்யும் சிங்கள அரசு இவர்களை கைது செய்வதில்லை. புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்ட முனைகிறார்கள் என்று அப்பாவி அகதிகளை கைது செய்து சிறப்புமுகாமில் அடைக்கும் இந்திய அரசும் இவர்களை கைது செய்வதில்லை. ஏனெனில் நாய்கள் தம் வால்களை கடிப்பதில்லை.

No comments:

Post a Comment