Monday, February 15, 2016

•எப்படி இத்தனை இலகுவாக கூறுகிறார்கள்? தமிழர்கள் உயிர் அத்தனை மலிவானதா?

•எப்படி இத்தனை இலகுவாக கூறுகிறார்கள்?
தமிழர்கள் உயிர் அத்தனை மலிவானதா?
காணாமல் போனவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று பிரதமர் ரணில் கூறுகிறார்.
காணாமல் போனவர்கள் அனைவரும் யுத்தத்தில் இறந்துவிட்டார்கள் என்று கோத்தபாயா கூறுகிறார்.
எப்படி இவர்களால் இத்தனை இலகுவாக கூறமுடிகிறது?
தமிழர்கள் உயிர் இவர்களுக்கு மலிவாக தெரிகிறதா?
சரி, அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் எனில்
அவர்களை யார் கொன்றது?
கொன்றவர்களுக்கு என்ன தண்டனை?
எல்லாவற்றுக்கும் மேலாக,
கொல்லப்பட்டவர்களின் மரண சான்றிதழ் வழங்கப்படுமா?
உறவினர்களுக்கு இழப்பீடு கொடுக்கப்படுமா?
இதை எப்போது செய்வார்கள்?
இவற்றையெல்லாம் கேட்க வேண்டிய சம்பந்தர் அய்யாவோ
இன்றைய அரசு நல்லாட்சி புரிகிறது என்கிறார்.
கொன்ற மகிந்தவை தேசிய தலைவர் என்கிறார்.
ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்று ஏமாற்றுகிறார்.
இதை சுட்டிக்காட்ட வேண்டிய புலம் பெயர்ந்தவர்களோ
சம்பந்தரை சாணக்கியர் என்று புகழ்ந்து விருது கொடுக்கிறார்கள்.
இதனால்தானே அவர்கள் இத்தனை இலகுவாக
எல்லோரும் இறந்துவிட்டார்கள் என்று கூறமுடிகிறது?

No comments:

Post a Comment