Sunday, February 28, 2016

•நேற்று- வித்தியா இன்று -ஹரிஸ்ணவி நாளை- ?????

•நேற்று- வித்தியா
இன்று -ஹரிஸ்ணவி
நாளை- ?????
நேற்று வித்தியா என்ற பள்ளி மாணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
ஜனாதிபதி மைத்திரி வித்தியாவின் தாயாரை நேரில் சந்தித்து சிறப்பு நீதிமன்றம் அமைத்து குற்றவாளிகளை விரைவில் தண்டிப்போம் என்றார்.
அமைச்சர்கள்கூட வீதியில் இறங்கிப் போராடினார்கள்.
இன்று இன்னொரு பள்ளி மாணவி ஹரிஸ்ணவி வவுனியாவில் பாலியல் வல்லுறலு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி வெளிநாடு சென்றுவிட்டார். இல்லையேல் இந்த பள்ளிமாணவியின் தாயாரையும் சந்தித்து விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்று உறுதிமொழி கூறியிருப்பார்.
நாளை இன்னொரு மாணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்படுவார். அப்போதும் எமது தலைவர்கள் உறுதி மொழி கொடுத்துக்கொண்டு இருப்பார்கள்.
எமது தலைவர் சம்பந்தர் அய்யா இருக்கிறார். அவருக்கு பொலிஸ் காவல் உள்ளது.
எமது முதலமைச்சருக்கு பொலிஸ் காவல் உள்ளது.
எமது பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் பொலிஸ் காவல் உள்ளது.
ஆனால் இவர்களை வோட்டு போட்டு தெரிவு செய்த தமிழ்மக்களுக்குதான் பாதுகாப்பு இல்லை.
புலிகளை பயங்கரவாதிகள் என்றார்கள். ஆனால் அந்த பயங்கரவாதிகளின் காலத்தில் ஒரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்படவில்லையே!
இதுகுறித்து நல்லாட்சி ஜனாதிபதி மைத்திரியும் வாழ்நாள்வீரர் சம்பந்தார் அய்யாவும் என்ன சொல்லப்போகிறார்கள்?
எயிட்ஸ் நோயாளியை ஒதுக்காமல் சமூகத்துடன் அரவணைத்து கொள்ள வேண்டும் என மருத்துவம் கூறுகிறது.
ஆனால் இலங்கையில் எயிட்ஸ் நோயால் இறந்ததாக வதந்தி பரப்பப்பட்ட ஒருவரின் 6 வயது மகனுக்கு பாடசாலையில் கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இச் சிறவனுக்கு எந்த எயிட்ஸ் நோயும் இல்லை என்று மருத்துவர்கள் உறுதிசெய்துதும்கூட எட்டு பாடசாலைகள் அனுமதி மறுத்துவிட்டன.
வேறு மாவட்டத்தில் போய் கல்வி கற்கும்படி மாவட்ட கல்வி அதிகாரியே கூறியிருக்கிறார்.
ஏழை சிறுவனும் அவன் தாயாரும் என்ன செய்ய முடியும்?
நம்புங்கள். இலங்கையில் நடப்பது நல்லாட்சியேதான்!

No comments:

Post a Comment