Monday, February 15, 2016

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் போகும். ஓடமும் ஒரு நாள் வண்டியில் போகும்

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் போகும்.
ஓடமும் ஒரு நாள் வண்டியில் போகும்
தன் மகன் தவறு செய்திருந்தால் தண்டியுங்கள் என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
மகிந்த மனுநீதிச் சோழனும் அல்ல. அவர் தன் மகனை தேர் ஏற்றிக் கொல்லப்போவதும் இல்லை.
தன் மகனுக்கு பதிலாக தன்னை கைது செய்யுமாறு மகிந்த கண்ணீர் மல்க கூறினார்.
எத்தனை தாய்மார்கள் அவர் காலைப் பிடித்து கதறினார்கள்?
எத்தனை தந்தைமார் கண்ணீர் மல்க அவரிடம் மன்றாடினார்கள்?
எத்தனை கைதிகள் விடுதலை செய்யும்படி அவரிடம் கேட்டார்கள்?
அப்போதெல்லாம் கொஞ்சம்கூட இரக்கம் காட்டாதவர் இப்ப எந்த முகத்துடன் மக்களிடம் கெஞ்சுகிறார்?
தன் பிள்ளைக்கு வந்தால் ரத்தம். மற்றவன் பிள்ளைக்கு வந்தால் தக்காளி சட்னியா?
இவர் பதவியில் இருக்கும்போது இவருடைய மகன்மார்கள் என்ன ஆட்டமெல்லாம் போட்டார்கள்?
ஒரு இளவரசர்கள் போல் அல்லவா டாம்பீக வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
அவர்கள் சவாரி செய்ய லண்டன் பகிங்காம் மாளிகையில் இருந்து குதிரை இறக்குமதி செய்தார்கள்.
இந்த குதிரையில் சவாரி செய்ய தினமும் கெலிகப்டரில் கொழும்பில் இருந்து நுவரேலியா சென்றார்கள்.
இளம் பெண்களை மயக்க வெளிநாடுகளில் இருந்து விலை உயர்ந்த கார்களை இறக்குமதி செய்தார்கள்.
அந்த இளம்பெண்களுடன் ஓட்டல்களில் குடித்து கும்மாளம் அடித்தார்கள்.
தான் விரும்பிய பெண் தன்னை விரும்பவில்லை என்பதற்காக அப் பெண் முன்னெ அவள் காதலனை சித்திரவதை செய்து கொன்றார்கள்.
அப் பெண் இதுகுறித்து வாய் திறக்கக்கூடாது என்று மிரட்டி வெளி நாட்டில் உள்ள தூதரகம் ஒன்றில் பணி செய்ய அனுப்பி வைத்தார்கள்.
இப்படிப்பட்ட மகனை கைது செய்தால் தான் தற்கொலை செய்வேன் என தாயார் சிராந்தி ராஜபக்ச மிரட்டுகிறார்.
இவர்கள் எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
மகிந்த ராஜபக்ச தனக்கு பதவி தந்தது திருப்பதி சாமி என நம்புகிறார்.
மகிந்த ராஜபக்ச தனக்கு அதிகாரம் கிடைத்தது சோதிடத்தால் என நம்புகிறார்.
மகிந்த ராஜபக்ச தனக்கு பணம் கிடைத்தது தன் கையில் போட்டிருக்கும் மோதிரங்களால் என நம்புகிறார்.
ஆனால் ,
தனக்கு பதிவி தந்தது மக்கள் என்பதை அவர் மறந்துவிட்டார்.
தனக்கு அதிகாரத்தை தந்தது மக்கள் என்பதை மறந்துவிட்டார்.
பதவியும் அதிகாரத்தையும் தந்த அதே மக்களே அவற்றை பறித்தவிட்டார்கள் என்பதை அவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
திருப்பதி சாமியோ அல்லது கூட இருக்கும் சோதிடரோ அல்லது கையில் அணிந்திருக்கும் மோதிரங்களையோவிட உண்மையான மகத்தானசக்தி மக்களே.
மக்களே மகத்தான சக்தி என்பதை மகிந்த முதலில் உணர வேண்டும்.

No comments:

Post a Comment