Monday, February 15, 2016

சிங்கள எம்.பி தமிழ் மீனவனுக்காக குரல் கொடுக்கிறார். தமிழ் மீன்பிடித்துறை அமைச்சர் ISIS காரர்களை ஒடுக்கும்படி கோருகிறார். என்னே அவலம் இது?

•சிங்கள எம்.பி தமிழ் மீனவனுக்காக குரல் கொடுக்கிறார்.
தமிழ் மீன்பிடித்துறை அமைச்சர் ISIS காரர்களை ஒடுக்கும்படி கோருகிறார்.
என்னே அவலம் இது?
தமிழ்தேசிய கூட்டமைப்பால் இனவாதக் கட்சி என கூறப்படும் ஜே.வி.பி யைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கேரத் அவர்கள் தமிழ் மீனவர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்.
ஒரு நாளைக்கு 1500 இந்திய றோலர் படகுகள் வருவதையும் அவை வருடமொன்றிற்கு864 கோடி ரூபா பெறுமதியான கடல் வளங்களை சூறையாடுவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனால் வடபகுதி தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுவதையும் அவர் எடுத்தக் கூறியுள்ளார்.
வடபகுதி தமிழ் மீனவர் சங்கத் தலைவா அவர்கள்; தமிழ்தேசியகூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் அய்யாவிடம் தமது குறைகளை விளக்கி மனு கொடுத்துள்ளார்.
பாராளுமன்ற எதிர்கட்சி தலைவரான சம்பந்தர் அய்யா அவர்கள் இதுவரை இந்த தமிழ் மீனவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை.
வடமாணகான சபையில் மீன்பிடித்துறை அமைச்சராக இருக்கும் தமிழரான டெனீஸ்வரன் அவர்கள் தமிழ் மீனவர்களின் அவல நிலைக்கு குரல் கொடுக்கவில்லை. மாறாக ISIS பயங்கரவாதிகளை ஒடுக்கும்படி குரல் கொடுக்கிறார்.
முன்னிலை சோசலிசக் கட்சியினர் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யும்படி யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தினார்கள்.
அவர்கள் இனவாதிகள் என்றும் அவர்கள் போராட்டத்தில் கலங்து கொள்ள வேண்டாம் என்றும் மாவை சேனாதிராசா சிறைக்கைதிகளின் உறவினர்களை மிரட்டியிருக்கிறார்.
இவர்கள் தாங்களும் போராட மாட்டார்கள். போராட வருபவர்களையும் விட மாட்டார்கள்.
என்னே அவலம் இது?

No comments:

Post a Comment