Monday, February 15, 2016

•காவல்துறையின் அராஜகத்தை கண்டிப்போம்!

•காவல்துறையின் அராஜகத்தை கண்டிப்போம்!
திலீபனை தேசிய கொடியை எரித்தமைக்காக கைது செய்த காவல்துறையினர் அவரது கையை உடைத்தது மட்டுமன்றி அதனை போட்டோ எடுத்து பரப்பி வருகின்றனர்.
திலீபன் தவறு செய்திருந்தால் அவரை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து அவர் கையை முறிப்பது என்ன நியாயம்?
இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டப்படியான ஆட்சி நடக்கிறது என்கிறார்கள்.
ஆனால் திலீபனை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் அவர் கையை முறிப்பது என்ன நியாயம்?
காவல்துறையின் இந்த அராஜகம் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டும்.
இந்த அராஜகத்தை செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதற்காக அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment