Sunday, February 28, 2016

•கலைஞர் திருந்தவுமில்லை. திருந்தப்போவதுமில்லை.

•கலைஞர் திருந்தவுமில்லை. திருந்தப்போவதுமில்லை.
ஈழத் தமிழர்களை அழித்ததாக குற்றம்சாட்டி எந்த காங்கிரசுடனான உறவை கலைஞர் துண்டித்தாரோ இப்போது அதே காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஈழத் தமிழர் குறித்த கொள்கையில் எந்த மாற்றத்தையும் அறிவிக்காத நிலையில் அதே காங்கிரசுடன் கூட்டு சேர்ந்ததன்மூலம் தமிழினத்திற்கு மாபெரும் துரோகத்தினை கலைஞர் புரிந்துள்ளார்.
தமிழினம் அழிந்தாலும் பரவாயில்லை. தனக்கும் தன் குடும்பத்திற்கு பதவி வேண்டும் என்பதற்காக உலக தமிழின தலைவர் என்று தன்னை அழைத்தக்கொள்ளும் கலைஞர் இத் துரோகத்தினை செய்கிறார்.
ஏற்கனவே மக்களால் தோற்கடிக்கப்பட்டும்கூட கலைஞர் திருந்தவில்லை. அவர் திருந்தப் போவதில்லை என்பதையே இது காட்டுகிறது.
எனவே இம்முறை யார் வெல்ல வேண்டும் என்பதிலும் பார்க்க கலைஞர் வெல்லக்கூடாது என்பதே தமிழகமக்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.
இம்முறை கலைஞர் அடையப்போகும் தோல்வி இனி எந்தவொரு தமிழ் தலைவரும் தமிழினத்திற்கு துரோகம் செய்ய முடியாத பயத்தையும் , படிப்பினையையும் கொடுக்க வேண்டும்.
கலைஞருடன் மட்டுமல்ல யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் காங்கிரஸ்கட்சி தமிழகத்தில் கட்டுக்காசுகூட பெறமுடியாத நிலையை தமிழ்மக்கள் காட்ட வேண்டும்.
ஈழத் தமிழர்களின் குருதி படிந்த கையுடன் சோனியா வருகிறார். அவரையும் அவருடைய காங்கிரஸ் கட்சியையும் தமிழ் மக்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள் என்பதை தேர்தலில் காட்ட வேண்டும்.
யுத்தத்தை நிறுத்துமாறு முத்தக்குமார் உட்படி 16 பேர் தங்களையே எரித்துக் கேட்டார்கள். கல்மனம் கொண்ட சோனியா இரங்கவேயில்லை.
வாக்குச்சாவடியில் ஒவ்வொரு தமிழன் மனதிலும் நினைவுக்கு வரவேண்டியது முள்ளிவாய்க்காலில் தங்களைக் காப்பாற்றுங்கள் என்று குரல் எழுப்பி மாண்ட அப்பாவி தமிழர்களின் அழுகையொலியே!

No comments:

Post a Comment