Sunday, February 28, 2016

•நேற்று- திலீபன் இன்று- கன்னையா குமார் நாளை- இதைப் படிக்கும் நீங்களாக இருக்கலாம்

•நேற்று- திலீபன்
இன்று- கன்னையா குமார்
நாளை- இதைப் படிக்கும் நீங்களாக இருக்கலாம்
நேற்று காவல் நிலையத்தில் வைத்து திலீபனின் கையை முறித்தவர்கள்
இன்று நீதிமன்ற வாசலில் வைத்து கன்னையா குமாரை தாக்கியுள்ளனர்.
நாளை உங்கள் வீட்டிற்கள் புகுந்து உங்களையும் தாக்குவார்கள்.
கிட்லரின் பாசிசம் மீண்டும் மோடியின் வடிவில் வருகிறது.
அனைவரும் ஒன்று திரண்டு எதிர்க்கத் தவறினால்
காவிப் பாசிசம் உங்கள் அனைவரையும் விழுங்கிவிடும்
•முஸ்லிம்களையும் கிருத்தவர்களையும் தீயிட்டு கொளுத்தியவர்கள்
•தலித்துகளை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் போனவர்கள்
•சட்டமன்றத்தில் பிட்டு(sex) படம் பார்த்தவர்கள்
•நடிகை ஹேமமாலினிக்கு 70 கோடிரூபா நிலத்தை வெறும் பத்தாயிரம் ரூபாவிற்கு கொடுத்தவர்கள்
•இறந்த ராணுவ வீரர்களுக்கு வாங்கிய சவப் பெட்டியில் ஊழல் செய்தவர்கள்
•மக்களின் 6000கோடி ரூபா பணத்தை எடுத்து அதானி சுரங்கம் தோண்ட டெப்பாசிட் கட்டியவர்கள்
•மேக் இன் இந்தியா என ஒருபுறத்தில் பேசிக்கொண்டு மறுபறத்தில் அரசு நிறுவனத்தை முதலாளி அம்பானிக்கு தாரை வார்த்தவர்கள்
•2012 வரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றாதவர்கள்
•விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து ஒரு தடவைகூட சிறைக்கு போகாதவர்கள்
மற்றவர்களுக்கு தேசவிரோத சேட்டிபிக்கேட் கொடுக்கிறார்கள்
"தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்" என்று தந்தை பெரியார் அன்றே சொன்னார்.
இந்திய நாட்டை அந்நியனுக்க விற்பவர்கள் தேச பக்தர்களாம்
இந்தியநாட்டை அந்நியனுக்கு விற்காதே என்பவர்கள் தேச விரோதிகளாம்.
குனிந்து நடப்பது தேசிய சட்டமென்றால் நிமிர்ந்து நடப்பது தேசத் துரோகம்தான்.
ஆம். நாம் நிமிர்ந்து நடப்போம். தேசத் துரோகிகளாகவே இருப்போம்.

No comments:

Post a Comment