Monday, February 15, 2016

எல்லாம் வல்ல ஆண்டவனால் தன்னால் தூக்கமுடியாத கல்லைப் படைக்க முடியுமா? - ஸ்டீபன் ஹாகிங்ஸ்

எல்லாம் வல்ல ஆண்டவனால் தன்னால் தூக்கமுடியாத கல்லைப் படைக்க முடியுமா? - ஸ்டீபன் ஹாகிங்ஸ்
அப்படியொரு தூக்க முடியாத கல்லைப் படைத்தால் அவர் எல்லாம் வல்லவர் என்பது பொய் ஆகும். அப்படியொரு கல்லை அவர் படைக்கவில்லை என்றாலும் அவர் எல்லாம் வல்ல கடவுள் என்பது பொய் ஆகும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் விஞ்ஞானி ஜன்ஸ்டீன் எதிர்வு கூறிய ஈர்ப்புவிசை அலைகளை இன்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இதனை விண்வெளி ஆராய்ச்சியில் மகத்தான கண்டு பிடிப்பு என புகழ்திருக்கிறார் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங்ஸ்.
பிரபஞ்ச உண்மைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக மனித குலம் அறிந்து வருகிறது. அறிவியல் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
ஒருபுறம் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கட் விடப்படுகின்றது.
மறுபுறம் செவ்வாய் தோசம் நீங்க பூசை செய்யப்படுகிறது.
ஒருபுறம் சனி கிரகத்தை ஆய்வு செய்யப்படுகிறது.
மறுபுறத்தில் சனி தோசம் நீங்க பூசை செய்யப்படுகிறது.
ஒருபுறம் சந்திரனில் காலடி பதிக்கப்படுகிறது.
மறுபுறத்தில் கடவள் தலையில் சந்திரன் இருப்பதாக கதை சொல்லப்படுகிறது.
ஒருபுறத்தில் கிரகணத்தை படம் பிடித்து காட்டப்படுகிறது.
மறுபறத்தில் பாம்பு சந்திரனை விழுங்கிறது என்று கதை சொல்லப்படுகிறது.
ஒருபறத்தில் பிரபஞ்ச உண்மைகள் அறியப்படுகிறது.
மறுபுறத்தில் சாமிகளின் ஆணுறுப்பை கடவுளாக வணங்கப்படுகிறது
என்னெ உலகம் இது?
எப்பதான் அறிவியலை ஏற்றுக்கொள்ளப்போகிறது?

No comments:

Post a Comment