Sunday, February 28, 2016

•தமிழக அரசு தயவு காட்டுமா? பேரறிவாளனுக்கு பரோல் கிடைக்குமா?

•தமிழக அரசு தயவு காட்டுமா?
பேரறிவாளனுக்கு பரோல் கிடைக்குமா?
பேரறிவாளனின் தந்தையார் குயில்தாசன் அவர்கள் கடும் சுகயீனமுற்றுள்ளார். அவர் தான் இறப்பதற்கு முன்னர் பேரறிவாளனை பார்வையிட விரும்புகிறார்.
பேரறிவாளனும் தனது தந்தையாரைப் பார்வையிடுவதற்காக ஒரு வார பரோல் விடுமுறை கேட்டுள்ளார்.
பேரறிவாளன் கைதான காலத்தில் இருந்து 25 வருடங்களாக இதுவரை பரோல் விடுமுறை கேட்டதேயில்லை.
ஒரு ஆயுள்தண்டனை சிறைவாசி வருடத்தில் மூன்றுமுறை மொத்தம் 60 நாட்கள் பரோல் விடுமுறை பெறமுடியும். எனவே சிறை விதிகளின்படி பேரறிவாளன் பரோல் விடுமுறை பெறமுடியும்.
பேரறிவாளனதும் அவரது தந்தையினதும் விருப்பப்படி தமிழகஅரசு தயவு காட்ட வேண்டும். பேரறிவாளனுக்கு பரோல் விடுமுறை தாமதம் இன்றி உடன் வழங்க வேண்டும்.
சிறைத் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத் சிறையில் இருந்த காலத்தைவிட பரோலில் இருந்த காலமே அதிகம்.
அதுமட்டுமல்ல சஞ்சய்தத் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டு தண்டனைக்காலம் முடியுமுன்னரே சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அப்பாவியான பேரறிவாளன் உண்மையில் விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழக அரசு விடுதலை செய்ய முன்வாராவிடினும் அவரை பரோலில் விடுவிக்கவாவது முன்வரவேண்டும்.
இப்பொது தேர்தல் காலம். எனவே பேரறிவாளன் கோரிக்கையை தேர்தல் கண்ணோட்டத்தில் அணுகாமல் சட்டப்படியும் நியாயப்படியும் அணுக வேண்டும்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றால் நடிகர் சஞ்சய்தத்தும் பேரறிவாளனும் ஒரே மாதிரியாகவே சட்டத்தின் முன் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் இந்தியாவில் சஞ்சய்தத்திற்கு ஒரு நியாயம், பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயம் வழங்கப்படுகிறது. இது என்ன நியாயம்?
உள்ளவனுக்கு ஒரு நியாயம்.
இல்லாதவனுக்கு இன்னொரு நியாயம்.
இதுதான் இந்திய நியாயமா?

No comments:

Post a Comment