Sunday, February 28, 2016

•இந்த ஆதிவாசிப்பெண் செய்த தவறு என்ன?

•இந்த ஆதிவாசிப்பெண் செய்த தவறு என்ன?
தனது நிலத்தை அந்நியருக்கு விற்காதே என்று கூறுவது
இந்தியாவில் அத்தனை பெரிய தவறா?
சோனி கோரி.
சதீஸ்கர் மாநிலத்தில் வாழும் ஒரு ஆதிவாசிப் பெண்.
இவரை மாவோயிஸ்ட் பயங்கரவாதி என்றார்கள்
இவரை கைது செய்து சித்திரவதை செய்தார்கள்
இவருக்கு மின்சார தாக்குதல் கொடுத்தார்கள்
இவரை பாலியல் வல்லுறவு செய்தார்கள்.
இவர் பெண் உறுப்பில் கூரிய கல்லைச் செருகினார்கள்.
இத்தனை சித்திரவதை செய்த காவல் துறை அதிகாரிக்கு குடியரசுப் பதக்கம் வழங்கினார்கள்.
ஒரு பெண்ணின் உறுப்பில் கல்லை செருகுவதன் மூலம் எப்படி மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்க முடியும்? என்ற நீதிபதியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அரசு தடுமாறியது.
இறுதியாக உச்ச நிதிமன்றம் சோனி கோரியை விடுதலை செய்தது.
அதனையும் பொறுக்காமல் தற்போது சோனி கோரியின் முகத்தில் அசிட் வீசியுள்ளார்கள்.
நல்லவேளை அவர் கண்கள் பாதிக்காமல் தப்பியுள்ளன.
அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இத்தனைக்கும் இவர் செய்த தவறு என்ன?
அரசியல்வாதிகள் போல் ஊழல் செய்தாரா?
முதலாளிகள் போல் கொள்ளையடித்தாரா?
(ஆ) சாமிகள் போல் லீலைகள் புரிந்தாரா?
நாட்டைக் காட்டிக் கொடுத்தாரா?
இவை எந்த தவறையும் அவர் செய்யவில்லையே?
அவர் கேட்டதெல்லாம் தான் வாழும் நிலத்தை அந்நிய கம்பனிகளுக்கு விற்காதே என்ற ஒன்றை மட்டும்தானே!
காப்ரேட் கம்பனிகளுக்கு நாட்டை விற்காதே என்று கேட்பது
இந்தியாவில் அத்தனை பெரிய தவறா?
காவி ஞாயம்மாரே!
இதற்கு என்ன பதில் கூறப்போகிறீர்கள்?

No comments:

Post a Comment