Sunday, February 28, 2016

•பிரித்தானிய பிரதமரும் தமிழக முதல்வரும்

•பிரித்தானிய பிரதமரும் தமிழக முதல்வரும்
பெரும் வல்லரசுகளில் ஒன்றான பிரித்தானியாவின் பிரதமர் பந்தா எதுவுமின்றி திரிகிறார். தானே கடைக்கு சென்று மீன் வாங்குகிறார். மக்களும் இதனை ஆச்சரியமாக பார்ப்பதில்லை.
ஆனால் இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதல்வர் ஜெயா அம்மையார் கறுப்பு பூனை பாதுகாப்பு இன்றி வெளியே வர தயங்கிறார். இவர் "புரட்சிதலைவி" என்கிறார்கள். தமிழ் மக்களின் "அம்மா" என்கிறார்கள். அப்படியென்றால் ஏன் கறுப்பு பூனை பாதுகாப்பு?
ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு ஜனநாயக தலைவருக்கு இத்தனை பாதுகாப்பு என்பது வெட்கப்பட வேண்டியதொன்றல்லவா?
மக்களின் தலைவர்கள் என தங்களை அழைத்துக்கொள்ளும் இவர்கள் மக்கள் மத்தியில் வருவதற்கு ஏன் இத்தனை பாதுகாப்பு?
ஜெயா அம்மையாரின் எல்லா தவறுகளையும் சுட்டிக்காட்டும் கலைஞர் அவர்களும் இந்த கறுப்பு பூனை பாதுகாப்பை விமர்சிப்பதில்லை. ஏனென்றால் அவரும்கூட அந்த பாதுகாப்பை கொண்டிருக்கிறார்.
கலைஞர் இப்போது பதவியில் இல்லை. சட்டசபைக்கும் செல்வதில்லை. அவருக்கு எதற்கு கறுப்புபூனை பாதுகாப்பு?
கலைஞருக்கும் ஜெயா அம்மையாருக்கும் புலிகளால் உயிராபத்து என்றே பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. இப்போது புலிகள் அழிந்து 7 வருடமாகிவிட்டது. இன்னும் எதற்கு இவர்களுக்கு கறுப்புபூனை பாதுகாப்பு?
இவர்கள் கறுப்பு பூனை பாதுகாப்பு வைத்திருப்பது பாதுகாப்பிற்காக அல்ல. வெறும் வெட்டிப் பந்தாவுக்காகவே.
ஒவ்வொரு தமிழன் தலையிலும் 33 ஆயிரம் ரூபா கடன் உள்ளது என்று நிதியமைச்சர் பனன|Pர்செல்வம் கூறுகிறார்.
அதுமட்டுமல்ல, தமிழகம் முழுவதும் 6000 பள்ளிகளில் டாய்லெட் வசதி இல்லை.
இந்த நிலையில் மக்களின் வரிப்பணத்தில் தலைவர்களுக்கு வீண் பாதுகாப்பு தேவைதானா?
தமிழக மக்கள் இந்த கேள்வியை தேர்தலில் எழுப்புவார்களா?

No comments:

Post a Comment