Sunday, February 28, 2016

•சஞ்சய்தத்திற்கு ஒரு நீதி பேரறிவாளனுக்கு இன்னொரு நீதி இதுதான் இந்திய நீதியா?

•சஞ்சய்தத்திற்கு ஒரு நீதி
பேரறிவாளனுக்கு இன்னொரு நீதி
இதுதான் இந்திய நீதியா?
செய்தி- சஞ்சய்தத் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஏ.கே 47 ஆயுதம் வைத்திருந்தமைக்காக 5 வருடம் தண்டனை பெற்ற சஞ்சய்தத் 4 வருட சிறைவாசமே அனுபவித்த நிலையில் இன்று முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பற்றரி வாங்கி கொடுத்த குற்றத்திற்காக ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் 25 வருடங்கள் கழித்துவிட்டபோதும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.
சஞ்சய்தத்திற்கு பல முறை பரோல் விடுமுறை கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் தனது அமெரிக்க காதலியுடன் சேர்ந்திருக்க அனுமதிக்கப்பட்டது.
ஆனால் பேரறிவாளன் தனது தந்தை கடும் சுகயீனமுற்று இருப்பதாகவும் அவரைப் பார்க்க பரோல் விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் இன்னமும் பரோல் விடுமுறை வழங்கப்படவில்லை.
நளினியின் தந்தையார் இறந்தமைக்காக 12 மணி நேர பரோல் வழங்கப்பட்டது. அதுபோல் பேரறிவாளனுக்கும் தந்தை இறந்த பின்புதான் பரோல் வழங்கப்படும்போல் தெரிகிறது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் சஞ்சய்தத்ற்கு ஒரு நீதியும் பேரறிவாளனுக்கு இன்னொரு நீதியும் வழங்கப்படுகிறது. இது என்ன நியாயம்?
உள்ளவனுக்கு ஒரு நீதி.
இல்லாதவனுக்கு இன்னொரு நீதி.
இதுதான் இந்திய நீதியா?

No comments:

Post a Comment